பட்டாபிராம், ஆவடி மின்சார ரயில்கள் நாளையும் நாளை மறுநாளும் ரத்து! ஏன் என்னாச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரையிலிருந்து பட்டாபிராமுக்கு செல்லும் மின்சார ரயிலும் அங்கிருந்து ஆவடிக்கு புறப்படும் மின்சார ரயிலும் நாளை வெள்ளிக்கிழமையும் நாளை மறுநாள் சனிக்கிழமையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

 Electric trains for Pattabiram and Avadi will be cancelled tomorrow

பட்டாபிராமில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (மூா் மாா்க்கெட் வளாகம்) அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

இதற்கு பதிலாக பட்டாபிராமில் இருந்து சென்ட்ரலுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். இதுபோல் ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 3.50 மற்றும் அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

பயணிகள் வசதிக்காக இந்த தேதிகளில் அதிகாலை 4 மற்றும் 4.05 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். மேலும், பட்டாபிராமில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.25 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) , நாளை மறுநாள் ஆவடியுடன் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+