Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு! இதுவரை எந்தெந்த அமைச்சர்கள் வீட்டில் ED சோதனை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு நடந்து வரும் நிலையில் இதுவரை யார் யார் வீட்டில் எல்லாம் ரெய்டு நடந்தது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். அமலாக்கத் துறை ரெய்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவை குறித்தும் பார்க்கலாம்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளவர் ஐ.பெரியசாமி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.

i periyasamy ed raid dmk

இந்த நிலையில் இன்று காலையிலேயே அமைச்சர் பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐ.பெரியசாமிக்கு சொந்தமான சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தெரியவருகிறது. கடந்த திமுக ஆட்சியின் போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த அதிகாரிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததாக ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

i periyasamy ed raid dmk

அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட போதிலும் அண்மையில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுவரை ஆளும் கட்சிக்குச் சொந்தமானவர்களின் வீடுகளில் எங்கெல்லாம் அமலாக்கத் துறை சோதனை நடந்தது என்பதை பார்க்கலாம்.

கடந்த ஜனவரி மாதம், திமுக பொதுச் செயலாளரும், நீர் வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் இன்று அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான வீட்டில்தான் இந்த ரெய்டு நடந்தது.

i periyasamy ed raid dmk

அது போல் திமுக எம்பியும் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்தின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது வேலூரில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ 11 கோடி பணத்தை வருமானவரித் துறை பறிமுதல் செய்தது.

அது போல் கடந்த ஏப்ரல் மாதம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, அவரது மகன் அருண் நேரு உள்ளிட்டோர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை தொடர்பாக சிபிஐ, கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. மேலும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. கிட்டதட்ட 12 ஆண்டுகள் கழித்து அமலாக்கத் துறை இந்த சோதனையை நடத்தியது.

i periyasamy ed raid dmk

அது போல் திமுக மூத்த தலைவரும் பொதுப் பணித் துறை , நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் திருவண்ணாமலை வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தியது. அவருக்கு சொந்தமான கலை கல்லூரிகள், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+