Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பிராட்வேயில் பிரம்மாண்ட பேருந்து நிலையம் + ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்.. கிடைத்தது கிரீன் சிக்னல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையம், குறளகம் கட்டிடத்தை மறுசீரமைத்து போக்குவரத்து முனையம், வணிக வளாகம் அமைக்கும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.

சென்னை பிராட்வேயில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தை மறுகட்டமைப்பு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. தற்போதைய பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி அதிகரித்துவிட்டது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மயமாதலுக்கு ஏற்ப பிராட்வே பேருந்து நிலையத்தை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Environmental Clearance Granted for Broadway Bus Terminal and Mall Project

இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, மல்டி மாடல் போக்குவரத்து அம்சங்களுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. மேலும் மிகப்பெரிய வர்த்தக காம்ப்ளக்ஸ் ஒன்றும் கட்டப்படுகிறது. இது மொத்தம் பத்து மாடிகள் கொண்டதாக இருக்கும்.

இரண்டு பேஸ்மெண்ட்கள், பேருந்துகள் நிறுத்துவதற்கு இரண்டு தளங்கள், எஞ்சிய ஆறு தளங்களும் வர்த்தக பயன்பாட்டிற்காக கடைகள் உள்ளிட்டவை அமைக்கப்படும். பிராட்வே பேருந்து நிலையத்தை கட்டமைக்கும் பணியில் சென்னை மெட்ரோ அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் ஆகும்.

முதன்மை திட்டம் 566.6 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும். ஒட்டுமொத்த மல்டி மாடல் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலைய திட்டத்திற்கான மதிப்பீடு 822 கோடி ரூபாய் . பேருந்து நிலையத்தை அடுத்த 24 மாதங்களிலும், வர்த்தக கட்டிடம் மற்றும் குறளகம் கட்டிடத்தை அடுத்த 30 மாதங்களிலும் கட்டி முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பிராட்வே புதிய பேருந்து நிலையத்தில் மொத்தம் 73 பஸ் வேக்கள் இடம்பெறும். அதில் தரைத்தளத்தில் 36, முதல் தளத்தில் 23, குறளகம் இறுதி பகுதியில் 14 என அமைக்கப்படுகின்றன. பீக் ஹவர்களில் 3,000க்கும் மேற்பட்ட பயணிகளை கையாளும் அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக பேருந்து நிலையம் இருக்கும். 400-க்கும் மேற்பட்ட கார்கள், 1,100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு வசதிகள் செய்து தரப்படும்.

புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 30 எலிவேட்டர்கள், 27 எக்ஸ்குலேட்டர்கள் அமைக்கப்படும். இது தவிர பயணிகள் நடை மேம்பாலம், சுரங்க நடைபாதை பேருந்து நிலைய நடைபாதை, ஏசி வசதிகளுடன் கூடிய தரைத்தளம் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.

பிராட்வே பேருந்து நிலையப் பணிகள் நடைபெறுவதால் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராயபுரம் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராயபுரம் என்.ஆர்.டி பாலத்திற்கு அருகில் 3.45 ஏக்கர் பரப்பளவில் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில், பிராட்வே பேருந்து முனைய வளாகம், பல்நோக்கு வணிக வளாகம் அமைக்கப்படும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம். ரூபாய் 566 கோடியில் கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாக கட்டடம் 1,08,290 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. பேருந்து வளாக கட்டடத்தில் 2 அடித்தள நிலைகள், ஒரு தரைத்தளம் மற்றும் 8 மேல் தளங்கள் அமைகின்றன. 2 அடித்தள நிலைகள், தரைத்தளம் மற்றும் 9 மேல் தளங்களுடன் குறளகம் கட்டடம் அமைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+