யாரும் மிரட்டவில்லை.. அரசு சொன்னதை நம்பி போராட்டம் வாபஸ்.. இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு
சென்னை: எங்களின் கோரிக்கைகளை மூன்று மாதத்தில் நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்ததை அடுத்து உண்ணாவிரதப்போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இன்று முதல் பணிக்கு திரும்ப உள்ளதாகவும் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஒரு வாரத்துக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வந்தனர்.

இரவு பகலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 200க்கும் அதிகமான ஆசிரியர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அரசு தரப்பிடம் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வந்தது.
நேற்றைய தினம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
"இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகள் 3 மாத காலத்திற்குள் இறுதி செய்யப்பட்டு அறிக்ககை சமர்ப்பிக்கப்படும். 171 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களை முறையான ஊதிய விகிதத்திற்கு கொண்டு வருவது குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்" என்று தெரிவித்தார். தங்களது கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாததால் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதாக ஆசிரியர்கள் நேற்று இரவு அறிவித்தனர். இந்த சூழலில் இன்று காலை டிபிஐ வளாகத்திற்குள் வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்கள் அரசின் அறிவிப்பை ஏற்று தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். பிற்பகலுக்கு மேல் இடைநிலை ஆசிரியர்களும் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இன்றைய தினம் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், தங்களின் உண்ணாவிரதப்போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். போராட்டத்தை வாபஸ் பெறச்சொல்லி யாரும் மிரட்டவில்லை என்றும் எங்களின் கோரிக்கைகளை 3 மாதத்தில் நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளதாக கூறியுள்ளனர் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications