கருப்பும் அழகுதான்.. பெயரை மாற்றியது ஃபேர் அண்ட் லவ்லி.. புதுப் பெயர் என்ன தெரியுமா? #fairandlovely
சென்னை: யூனிலீவர் நிறுவனம், தனது அழகு கிரீமான, 'ஃபேர் & லவ்லி' பெயரை 'க்ளோ & லவ்லி' ('Glow & Lovely') என்று மாற்றியுள்ளது.
ஆண்களுக்கான ஸ்கின் கிரீம் 'க்ளோ & ஹேண்ட்சம்' (Glow & Handsome) என்று அழைக்கப்படும் என்று இந்துஸ்தான் யூனிலீவர் இன்று அறிவித்துள்ளது.
90ஸ் கிட்ஸ் அதிலும், பெண்கள் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருப்பது ஃபேர் அன்டு லவ்லி சரும கிரீம். குறைந்த நாட்களில் கருப்பான மேனியும் சிவப்பு நிறத்திற்கு மாறும் என்ற நம்பிக்கையால், நகரங்கள் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும், அவ்வளவு ஃபேமஸ்.
ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்.. மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ
45 வருட பாரம்பரியம்
கிட்டதட்ட 45 வருடங்களாக சந்தையில் வெற்றிகரமாக இருக்கும் காஸ்மெடிக்ஸ் பொருட்களில் ஒன்றுதான் ஃபேர் அண்ட் லவ்லி. ஆண்கள் கூட பவுடர் கலையாமல் இருக்க இதை பூசிக்கொள்வது உண்டு. அதன் வாசமும் பலருக்கு பிடிக்கும். பிறகு ஆண்களுக்காகவும் தனியாக க்ரீம் வெளியிட்டது இந்த நிறுவனம்.
ஃபேர் அண்ட் லவ்லி
இப்படி பலரின் உணர்வுகளோடு கலந்த பெயர்தான், Fair & Lovely. ஆனால், இந்த பெயரில் மாற்றம் கொண்டு வரப்போவதாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது. கறுப்பு என்பது அழகு குறைவானது. சிவப்பாக மாறுவதே அழகு எனப் பொருள் தரும்படி பெயர் இருப்பதாக உள்ளதால் இந்த முடிவை ஹிந்துஸ்தான் நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவித்தது.
புது பெயர்
இந்த நிலையில்தான், 'க்ளோ & லவ்லி' என்று பெயர் மாற்றியுள்ளது ஃபேர் அன்ட் லவ்லி. ஆண்களுக்கான ஸ்கின் கிரீம் 'க்ளோ & ஹேண்ட்சம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக அதன் உச்சரிப்பு கூட பெரும்பாலான பேருக்கு தெரியாமல் 'பேரன் லவ்லி' என்று மக்கள் வாயில் புழங்கியது. இனி புது பெயரை பழக்கிக் கொள்ள வேண்டியதுதான்.
பல்வேறு வண்ணங்கள்
"சரும பராமரிப்பு பிராண்டுகளின் உலகளாவிய போர்ட்ஃபோலியோவை உள்ளடக்குவதற்கும், அனைத்து தோல் டோன்களையும் கருத்தில் கொண்டும், அழகின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். 'ஃபேர்', 'வெள்ளை' மற்றும் 'ப்ரைட்' போன்ற சொற்களின் பயன்பாடு சரியானது ஒற்றை பரிணாமத்தோடு உள்ளதால் பெயர் மாற்றம் தேவைப்பட்டது, " என்று இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன அழகு சாதன பிரிவு தலைவர் சன்னி ஜெயின் தெரிவித்துள்ளார்.