Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் வாங்க போறீங்களா? அடுத்தடுத்த சர்ப்ரைஸ் பாருங்க.. டக்டக்னு பொருட்களை இனி பெறலாம்.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களின் நன்மையையும், வசதியையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.

மகளிர் உரிமைத்தொகை விநியோகம் காரணமாக, புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே வந்தது.. ஒரு லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படாமல் தேங்கி நின்றன.

Fantastic arrangements for Ration Shop card holders and Big instructions to the Tamil Nadu Ration Shops

காப்பீடு திட்டம்: மேலும், மருத்துவ காப்பீட்டு திட்ட சலுகைக்கும் ரேஷன் கார்டுதான் முக்கிய ஆவணமாக உள்ளதால், ரேஷன் கார்டுகளை உடனடியாக தர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன.

இந்நிலையில், 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில், "வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில், 27,577 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே, இணைய வழியில் பெறப்பட்ட இவர்களது விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடைய, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்.

செல்போன்: அனைவரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டுகளை, வட்ட வழங்கல் அலவலகங்களுக்கு நேரில் சென்றோ, தங்கள் குடும்ப உறுப்பினரை அனுப்பியோ பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் கார்டு எண்ணை கடை ஊழியர்களிடம் தெரிவித்து, விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின், கடையில் ரேஷன் பொருட்களை கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்" என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இதுநாள்வரை, ரேஷன் கார்டு உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் மூலமாக பொருட்களை பெற முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது புதிய ஏற்பாட்டினை அரசு செய்துள்ளது ரேஷன்தாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

கார்டுதாரர்கள்: அதேபோல, தற்போது வெயில் காலம் துவங்கிவிட்டதால், கார்டுதாரர்களை தேவையில்லாமல் வெயிலில் அலைக்கழிக்கக்கூடாது என்று ரேஷன் கடைகளுக்கு உத்தரவு பறந்துள்ளது..

அதாவது, வெயில் காரணமாக, பொதுமக்களுக்கு தேவையில்லாத அலைச்சல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, ஒரே தவணையில், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறதாம்.

அறிவுறுத்தல்: அதேபோல, கடைகளுக்கு முழு அளவில் பொருட்களை அனுப்புமாறும் நுகர்பொருள் வாணிப கழகத்திடம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, உணவு வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தொடர்ந்து அதிரடியாக ஆய்வில் ஈடுபட்டு, ஒரே தவணையில் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும்படியும் உத்தரவிடப்பட்டிருக்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+