அண்ணாவின் வாரிசு.. ஆட்சிப்பணியை அலங்கரிக்கும் கொள்ளுப்பேத்தி.. யுபிஎஸ்சி தேர்வில் மகுடம் சூடிய ராணி!
சென்னை: இந்திய ஆட்சி பணிகளுக்கான தேர்வான யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பாக 2019ம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இதில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
மொத்தம் 26 பணிகளுக்கான முடிவுகள் இதில் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏழ்மையான பின்னணியை சேர்ந்த பலர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று இருக்கிறார்கள்.

இந்தியா எப்படி
இந்தியா முழுக்க நடந்த இந்த ஆட்சி பணிகளுக்கான தேர்வில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றுள்ளார். 23 வயதான பிரித்திகா ராணி இந்த தேர்வில் வென்றுள்ளார். தமிழகத்தில் பலர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இவரின் வெற்றி தமிழகத்திற்கே நம்பிக்கை ஊட்டும் செய்தியாக, மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக வந்துள்ளது.

என்ன இடம்
அதிலும் பிரித்திகா ராணி தனது முதல் முயற்சியிலேயே தேர்வில் வென்று இருக்கிறார். 171 இடத்தை இவர் பிடித்துள்ளார். ஐஏஎஸ் ஆகும் கனவுடன் கடுமையான முயற்சிகளுடன் இவர் தேர்வை சந்தித்தார். இவரின் ரேங்க் காரணமாக பெரும்பாலும் இவருக்கு ஐஎப்எஸ் பணி கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

முதல் நபர்
இவர் யுபிஎஸ்சி வென்றவுடன் முதல் ஆளாக திமுக தலைவர் ஸ்டாலின், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தின் அரசியலுக்கு அடித்தளம் இட்டவர் அண்ணா. அவரின் கொள்ளுப்பேத்தி ஆட்சி பணிக்கு வருவது தமிழகத்திற்கே பெருமையான விஷயம். ஆட்சி பணியை அலங்கரிக்க உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று ராணிக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியல் இல்லை
அறிஞர் அண்ணா இன்றி தமிழகத்தின் அரசியலே இல்லை. இந்தி எதிர்ப்பில் தொடங்கிய தீ இன்னும் தமிழகத்தில் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கிறது. அதிமுக, திமுக என்று இரண்டு கட்சிகளும் அண்ணா இன்றி இல்லை. நான் கொண்டு வந்த சட்டங்களை நீக்க வேண்டும் என்றால்.. எந்த தலைவராக இருந்தாலும் எதிர்காலத்தில் பல முறை யோசிக்க வேண்டும் என்று கூறியவர் அண்ணா. அந்த அளவிற்கு மக்களை மனதில் வைத்து திட்டங்களை கொண்டு வந்தவர் அண்ணா.

ராணி ஆட்சி
தற்போது அதே அண்ணாவின் குடும்பத்தில் இருந்து ராணி ஆட்சி பணிக்கு வந்துள்ளார். அதிலும் இந்தி திணிப்பு, மாநில சுயாட்சி உரிமை பறிபோதல் என்று பல விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் மாநில சுயாட்சிக்கு வித்திட்ட அண்ணாவின் குடும்பத்தில் இருந்து ஒருவர் ஆட்சிக்கு பணிக்கு வருகிறார். கண்டிப்பாக இது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை அளிக்க கூடிய விஷயம் ஆகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications