Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛ஜாமீன் கூட கிடைக்காது’’.. சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! விரைவில் கைது? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் தமிழக போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் அவர் பங்கேற்று பேசிய நிலையில் ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் விரைவில் கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர் சவுக்கு சங்கர். அரசியல் விமர்சகரான இவர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். இந்த வேளைகளில் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்து வருகிறார்.

FIR filled under 4 sections on Savukku Shankar who participates protest against Parandur new Airport

இந்நிலையில் தான் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் என்பது ஓராண்டுகளை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக அரசு விமான நிலையம் அமைக்க உறுதியாக உள்ள நிலையில் அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது தான் தொடர் போராட்டத்துக்கு காரணமாக உள்ளது.

இந்நிலையில் தான் கடந்த 26ம் தேதி விமான நிலைய எதிர்ப்பு குழு சார்பில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்க அழைப்பு வந்த நிலையில் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற சவுக்கு சங்கருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதாவது இந்த போராட்டத்தில் தனிநபராக மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சவுக்கு சங்கர் கூடுதலாக சிலருடன் அங்கு கார்களில் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அந்த சமயத்தில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு சவுக்கு சங்கர் போராட்டத்தில் பங்கேற்றார்.

FIR filled under 4 sections on Savukku Shankar who participates protest against Parandur new Airport

இந்நிலையில் தான் சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளில் சுங்குவார்சத்திரம் போலீசார் அதிரடியாக வழக்குப்திவு செய்துள்ளனர். அதில் ஒன்று ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாக உள்ளது.அதாவது சவுக்கு சங்கர் மீது சட்டப்பிரிவு 147 (கலவரம் செய்தல்), 294 பி (அவதூறு பரப்புதல்), 506 (1) (கொலை மிரட்டல்), 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 506 (1) என்ற கொலை மிரட்டல் என்பது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்காகும். இதனால் விரைவில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்ய உள்ளனரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+