சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியபோது திடீரென டயர் வெடித்து விபத்து.. உயிர் தப்பிய 146 பயணிகள்!
சென்னை: மஸ்கட்டில் இருந்து 146 பயணிகளுடன் வந்த ஓமன் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. பைலட், சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு, மஸ்கட்டில் இருந்து 146 பயணிகளுடன் ஓமன் விமானம் ஒன்று வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய சமயத்தில் அந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்தது.

டயர் திடீரென வெடித்த நிலையில், விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்படுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணித்த 146 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.
மஸ்கட்டில் இருந்து வந்த இந்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டு அனைத்து பயணிகளும், சென்னையில் முக்கிய ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications