காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் தமிழக தீயணைப்புத் துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி! குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக தீயணைப்புத் துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். அவர் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.

1989 ஆம் ஆண்டு தமிழக பேட்ச்சை சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பி.கே. ரவி. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான ரேஸில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

Former TN Fire and rescue service department DGP B.K.Ravi joined in Congress

மாநில டிஜிபிக்கான ரேஸில் முதலிடத்தில் சஞ்சய் அரோராவும் இரண்டாவது இடத்தில் பி.கே.ரவியும் இருந்தனர். இந்த நிலையில்தான் பி.கே.ரவிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபி பதவி ஒதுக்கப்பட்டது.

கடந்தாண்டு தீயணைப்புத் துறை டிஜிபியாக பணியாற்றி வந்த பி.கே.ரவி தமிழக அரசின் உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதற்கான காரணம் தெரியவில்லை . ஆனால் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பது காவல் துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அவர் ஊர்க்காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது பதவிக்காலம் முடிவடைய 3 மாதங்கள் உள்ள நிலையில் பி.கே. ரவி விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் இன்றைய தினம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பீகார் காங்கிரஸ் கட்சித் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங்கின் முன்பு பி.கே.ரவி காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைக்கும் என தெரிகிறது. ஏற்கெனவே தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஓய்வு பெற்ற டிஜிபி கருணாசாகர் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

பி.கே. ரவி 34 ஆண்டுகள் பணிகாலத்தில் இருந்த போது பல்வேறு முக்கிய வழக்குகளை திறம்பட விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தார். தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்த போது விபத்தில்லா தீபாவளி என்ற முன்னெடுப்பை எடுத்தார். தமிழகம் முழுவதும் தீவிபத்துகளை தடுக்க 6,673 தீயணைப்பு வீரர்களை நியமித்தார். மேலும் 1,610 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் நலனுக்காக நடத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+