தமிழகத்தில் பல மாவட்டங்களில் சதமடித்த பெட்ரோல் - இன்று லிட்டர் எவ்வளவு தெரியுமா
தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை பல மாவட்டங்களில் சதமடித்துள்ளது. இன்றைய தினம் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.
சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்திலும் பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தொடர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். இன்றைய தினம் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ள நிலையில் சென்னையில் விரைவில் 100 ரூபாயை எட்டப்போகிறது.
Recommended Video
சர்வதேச எண்ணெய் நிறுவனங்களினால் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை நேற்றைய தினம் லிட்டருக்கு 30 காசுகளும் டீசல் விலை 23 காசுகளும் அதிகரிக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னையைத் தவிர 34 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது. ஸ்பீடு பெட்ரோல் 106 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.
அரியலூர், கோவை, கடலூர்,தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு,கள்ளக்குறிச்சி,காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,ராணிப்பேட்டை,சேலம்,சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர்,திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்,விருதுநகர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் நேற்றைய விலைக்கே விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் 99 ரூபாய் 49 காசுகள் ஆகவும், டீசல் லிட்டர் 93 ரூபாய் 46 காசுகள் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலையுடன் டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. டீசல் விலையும் பல்வேறு மாவட்டங்களில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.95 அளவுக்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக லாரி, ஆட்டோ, வாடகை கார் கட்டணங்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மேற்காசிய போர் பதற்றம்.. அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி இன்று ஆலோசனை! -
சிலிண்டர் ஏன் சிவப்பு கலரில் இருக்கு? நீலம், மஞ்சள் எதுக்கு? மக்கள் அறிய வேண்டிய நிறய குறியீடுகள் -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications