கஜா புயல்.. 80,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்.. 300 முகாம்கள் அமைப்பு!
கஜா புயல் காரணமாக 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை: கஜா புயல் காரணமாக 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. இதன் முன்ப்பகுதி கரையைத் தொட்டு கடந்து வருகிறது.
முழு புயல் கரையை கடக்க இன்னும் 2 மணி நேரம் ஆகும். இந்த புயல் கரையை கடக்க அதிகாலை 2.30 மணி வரை ஆகும்.
இந்த நிலையில் கஜா புயல் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். கடலூர், ராமேஸ்வரம், நாகை மாவட்ட மக்கள் பலர் மீட்பு முகாம்களுக்கு மாற்றபட்டுள்ளனர்.
இந்த மூன்று மாவட்டங்களில் புயல் அதிக தாக்க வாய்ப்புள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களில் வசித்த 80,399 மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.16,891 குழந்தைகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்
இந்த மூன்று மாவட்டங்களில் மொத்தம் 300 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 3000க்கும் அதிகமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.