நெருங்கும் கஜா புயல்.. அழகப்பா, அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் அழகப்பா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் அழகப்பா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது. கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்.

கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. இப்போதே பல இடங்களில் மிதமான மழை பெய்ய தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. புயலில் இருந்து மக்களை காப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
[கஜா புயலுக்கு எதிராக அரண்.. தமிழகம் முழுக்க தயார் நிலையில் மீட்பு படை வீரர்கள்!]
இந்த நிலையில் கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல் இன்று நடக்கவிருந்த அழகப்பா பல்கலை. துறைகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்ட்டு இருக்கிறது. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்பு அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications