தங்கம் கடத்திய 18 பேர்! தப்பிக்க வைக்க அதிகாரிகளை தாக்கிய கும்பல்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!
சென்னை: சென்னை விமான நிலையம் வழியாக தங்கம் கடத்திய 18 பயணிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால் சில நிமிடங்களில், அடையாளம் தெரியாத கும்பல் அதிகாரிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி பயணிகளை தப்பிக்க வைத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை இந்தியாவை விட வெளிநாடுகளில் குறைவாக உள்ளதால் அதை வரி கட்டாமல் கடத்தும் சம்பங்கள் அடிக்கடி நடக்கின்றன
நேற்று மலேசியா, கொழும்பு மற்றும் துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 18 பயணிகள் வந்தனர். அவர்களிடம் இருந்து 5.44 கோடி ரூபாய் மதிப்புள்ள 12.69 கிலோ தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நடந்து வந்தனர்
விசாரணைக்காக 18 பேரை கைது செய்த டி.ஆர்.ஐ அதிகாரிகள் குழு, தேவையான நடைமுறைகளுக்கு பின்னர் அவர்களை ஒரு வாகனத்தில் டி.ஆர்.ஐ அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக திட்டமிட்டு விமான நிலையத்திற்கு வெளியே அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். விமான நிலையத்தின் வருகை மண்டபத்திற்கு வெளியே அதிகாரிகள் குழு 18 பேரை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

தப்பிக்க வைத்தது
அப்போது 50 பேர் கொண்ட கும்பல், அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுப்பியும், அதிகாரிகளை தகாத வார்த்தைகளை திட்டியும் தாக்கியும் உள்ளது. அப்போது நடந்த வாக்குவாதத்தை பயன்படுத்தி தங்க கடத்தில் ஈடுபட்ட சிலர் தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் இரண்டு அதிகாரிகள் கும்பல்கள் தாக்கியதில் லேசான காயம் அடைந்தனர். தங்கம் கடத்தியவர்களை தப்பிக்க வைக்கும் நோக்கில் அதிகாரிகளுடன் அந்த கும்பல் சண்டை போட்டு தகராறு செய்தும் தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் உதவி
இச்சம்பவத்திற்கு பின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் தங்கம் கடத்த பயணிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு விமான சுங்க அதிகாரிகளுக்கு உள்ள பங்கு குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொளத்தூரைச் சேர்ந்த ஒரு அதிகாரியின் இல்லத்தில் நாங்கள் தேடினோம். அவர்.ஆர்.ஐ., உதவியாளர் பணியில் இருந்து சமீபத்தில் விலகிவிட்டார், அவர் கடத்தல்காரர்களுடன் சேர்ந்து தங்கத்தை கடத்துவதற்கு உதவியிருக்கலாம் என்று சந்தேக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

7 பேர் கைது
இதனிடையே தங்க கடத்தல் தொடர்பாக வியாழக்கிழமை, 18 கடத்தல்காரர்களில் 13 பேர் டி.ஆர்.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். இதற்கிடையில், மற்றொரு சம்பவத்தில், விமான நிலைய அதிகாரிகள் சென்னை விமான நிலையத்திலிருந்து கடத்த முயற்சித்த ரூ .2.28 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications