போட்றா வெடிய.. குழந்தைகளுக்கான அரசு பஸ் பயணம்.. கண்டக்டர்களுக்கு தமிழக அரசு மாஸ் உத்தரவு.. இனி ஜாலி
சென்னை: அரசு பஸ்களில், குழந்தைகளுக்கான பயணம் குறித்து நடத்துனர்களுக்கு முக்கிய அறிவுரைகளை போக்குவரத்து துறை வழங்கியிருக்கிறது.
பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது, பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும், போக்குவரத்து துறை அறிவுறுத்தியே வருகிறது.

அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதமும், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவுரை ஒன்றினை வழங்கியிருந்தார்..
பயணிகள்: அதில், மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும், அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்,
முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொருத்த வேண்டும், ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும், அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகளை கூறியிருந்தார்.
குழந்தைகள்: இந்நிலையில், குழந்தைகளுக்கான பயணம் குறித்து போக்குவரத்து துறை முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.. அதில் உள்ளதாவது: "அரசு போக்குவரத்து கழக புறநகர் பஸ்களில், ஐந்து வயது நிறைவடையாத குழந்தைகளை கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட 12 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு, அரை கட்டணம் வசூலிக்க வேண்டும்.
குழந்தைகளின் வயது குறித்து சந்தேகம் ஏற்பட்டால், பிறந்த நாள் சான்று அல்லது ஆதார் அடையாள அட்டை வாயிலாக உறுதி செய்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக 2020 ஜன., 1ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு நடப்பாண்டு டிச., 31ம் தேதி வரை பயண கட்டணம் வசூலிக்க தேவையில்லை.
புகார்கள்: இருந்த போதிலும், நடத்துனர்கள் கட்டணம் வசூலிப்பதாகவும், பயணியரிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எனவே, நடத்துனர்கள் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்பட வேண்டும்... மேலும், இதுகுறித்து புகார்கள் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியிருக்கிறார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications