எனக்கு பயமாக இருக்கிறது.. பொருளாதார ஆய்வறிக்கை பற்றி ப.சிதம்பரம் எச்சரிக்கை
சென்னை: 2018-19 ஆம் ஆண்டிற்கான அரசின் பொருளாதார ஆய்வு "மிருதுவானது" மற்றும் "அவ நம்பிக்கையுடனானது" என்று காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறினார்.
மத்திய அரசின் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனால், ராஜ்யசபாவில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் காணப்படும் அம்சங்கள் பற்றி சிதம்பரம் இன்று தனது விமர்சனங்களை முன் வைத்தார். அவர் கூறியவற்றை பாருங்கள்:
இந்த ஆய்வறிக்கையில், துறைவாரியான வளர்ச்சி விவரம் இல்லை. அரசு பேசும் பொருளாதாரம், அவநம்பிக்கை கொண்டதாக எனக்குத் தோன்றுகிறது.
நான் 2019-20க்கான அவுட்லுக்கைத் தேடினேன், இது தொகுதி (Volume) -2, அத்தியாயம் (Chapter) 1 இல் உள்ளது, ஆனால் 2019-20 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற பொதுவான வார்த்தை மட்டுமே உள்ளது. துறைவாரியாக எவ்வளவு வளர்ச்சி கிடைக்கும் என தெரிவிக்கப்படவில்லை.
2019-20க்கான எதிர்கால திட்டத்தை விவரிக்கும் வகையில் மிக பொருந்தக்கூடிய தகவல்களை, தொகுதி -2, அத்தியாயம் 02 இல் காணலாம்.
"பொருளாதார ஆய்வு நிலைகள் (1) மந்தமான வளர்ச்சி, (2) வருவாயின் பற்றாக்குறை, (3) நிதிப் பற்றாக்குறை இலக்கை சமரசம் செய்யாமல் புதிய மூலதனங்களை கண்டறிதல், (4) நடப்புக் கணக்கில் எண்ணெய் விலைகளின் தாக்கம் மற்றும் (5) 15ம் நிதி கமிஷன் பரிந்துரைகள். இவை எல்லாம் உள்ளன. இவை எதுவும் நேர்மறையானவை அல்லது ஊக்கமளிப்பவை அல்ல, இதனால் நான் பயப்படுகிறேன். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டு 7 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications