அரசு பள்ளிகளில் தமிழகம், டெல்லிதான் பெஸ்ட்.. பல மாநிலங்கள் மாணவர்களிடம் காசு கேட்கின்றன: கெஜ்ரிவால்
சென்னை: தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர்த்து அரசுப் பள்ளி மாணவர்களிடம் மாதம் ரூ.500 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

புதுமைப் பெண் திட்டம்
தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்
சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். இவரை கல்லூரியின் வாசலுக்கு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகளை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

புரட்சிகரமான திட்டம்
இதனைத்தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் புரட்சிகரமான திட்டம். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் முன்னோடி திட்டமாக விளங்க போகிறது. மார்ச் மாதத்தில் டெல்லி வந்த முதல்வர் ஸ்டாலின், அரசுப் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

பெண் கல்வி
எனக்கு வியப்பாக இருந்தது. அதன்பின்னர் அவரை அழைத்துக்கொண்டு, அரசுப் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்க்க அழைத்து சென்றேன். இந்தியாவில் பலர் வறுமையால் உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக அறிவார்ந்த பெண்கள் வறுமையாக் உயர்கல்வியை கைவிடுகின்றனர். நாட்டில் 27 கோடி மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். அதில் 18 கோடி மாணவிகள் அரசுப் பள்ளிகளுக்கு செல்கின்றனர். ஆனால் அவர்களில் உயர்கல்விக்கு செல்வோர் மிகவும் குறைவு.

அரசுப் பள்ளிகள்
நம் நாட்டில் உள்ள 66 சதவிகித அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளது. பிறகு எப்படி இந்தியா முன்னேறிய நாடாக மாறும். நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு தரமான, இலவசமான கல்வியை வழங்குவது தான் அரசின் முதல் கடமை. கடந்த 75 ஆண்டுகளில் கல்வியின் தரத்தில் சரியாக கவனம் செலுத்தவில்லை. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், 5 ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வியை நம்மால் கொடுக்க முடியும்.

அரசுப் பள்ளிகளில் கட்டணம்
ஒரு சில மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.500 கட்டணமாக பெறப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களால் எப்படி இந்த கட்டணத்தை கட்ட முடியும். ஏழை மாணவர்கள் கல்விக்காக எங்கு செல்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்னை அழைத்ததற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications