பல லட்சம் இன்சூரன்ஸ்! அதிகாலையே நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு! போன சூப்பர் மெசேஜ்! அசரவச்சிட்டாங்க
சென்னை: ESIS மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ESIS திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள்.. AB-PMJAY திட்டத்தின் கீழும் பயன் பெற முடியும் வகையில் மாற்றம் கொண்டு வர உள்ளனர்.
இந்த புதிய திட்டத்தின் கீழ், AB-PMJAY உடன் ESIS இன்சூரன்ஸ் திட்டத்தை இணைப்பார்கள். இதன் மூலம் 30,000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் ESIC/ESIS பயனாளிகள் தரமான மருத்துவ வசதிகளைப் பெறுவார்கள். இது அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் மருத்துவமனைகள் வழங்கும் சேவைகளை அணுகுவதில் உள்ள வேறுபாடுகளை நீக்கி, பயனாளிகள் எந்த ஒரு AB-PMJAY மருத்துவமனையிலும் திறம்பட சிகிச்சை பெற முடியும்.

ESIS என்பது அரசு வழங்கும் காப்பீடு திட்டம் ஆகும். இந்தியாவில் உள்ள ஊழியர்களின் காப்பீட்டுத் திட்டம் (ESI) நோய், மகப்பேறு, இறப்பு மற்றும் ஊனமுற்றோர் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்குகிறது. தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், உணவகங்கள், சினிமாக்கள், செய்தித்தாள்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் மருத்துவ நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு ESI திட்டம் பொருந்தும். மாதம் ₹21,000 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்கள் ESI திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ESIS மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ESIS திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள்.
இன்சூரன்ஸ் மாற்றம்: இது போக ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவை (AB PM-JAY) எனப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவின் பொது சுகாதாரத் துறையில் முக்கியமான புரட்சியாக பார்க்கப்படுகிறது.
முக்கியமாக இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் வருமான அளவிலான கட்டுப்பாடுகள் இல்லாமல் கொண்டு வரப்பட்டு உள்ளது. மூத்த குடிமக்களுக்கு மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் என்ன மாதிரியான வருமானம் வாங்கினாலும் , இந்த இன்சூரன்ஸ் திட்டம் அவர்களுக்கு அளிக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் கவர் ஆகும். முன்னதாக, AB PM-JAY திட்டத்தின் கீழ் 40% மக்கள் மட்டுமே பயன் அடைந்தனர். இந்த திட்டம் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இப்போது, இந்த விரிவாக்கம் மூலம் கூடுதலாக 6 கோடி நபர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் நாடு முழுக்க 4.5 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளனர்.
70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவ்வொரு பயனாளிகள் கண்டறியப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவார்கள். இவர்கள் இந்த திட்டத்தின் கீழ் புதிய ஹெல்த் கார்டைப் பெறுவார்கள்.
-
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications