கிராம நத்தம் நிலம் தங்கத்திற்கு சமம்! நிலத்தை விற்க முடியலையா? லோன் கிடைப்பதில் அரசு வைத்த ட்விஸ்ட்
சென்னை: பலருக்கு நத்தம் நிலத்தை விற்பதிலோ அல்லது அதன் மீது கடன் வாங்குவதிலோ சிக்கல்கள் இருக்கும்.. நத்தம் நிலத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா? சாதாரணப் பட்டாவிற்கும் நத்தம் பட்டாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? போன்ற சந்தேகங்களும் இருக்கலாம்.. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்வோம்..
தமிழகத்தில் நிலப்பரப்புகள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.. அதில் "கிராம நத்தம்" என்பது மிகவும் தனித்துவமானது.. முன்னோர்கள் காலத்தில் கிராமங்களில் மக்கள் குடியிருப்பதற்காக அரசு பிரத்யேகமாக ஒதுக்கிய நிலமே கிராம நத்தம் என்று அழைக்கப்படுகிறது..

விவசாய நிலங்கள்
பொதுவாக, விவசாய நிலங்களை வாங்கும்போதும் விற்கும்போதும் காட்டும் ஆர்வத்தை, மக்கள் நத்தம் நிலங்கள் விஷயத்தில் காட்டுவதில்லை.. ஆனால், சமீபகாலமாக இந்த நிலங்கள் தொடர்பான உரிமையியல் சிக்கல்களும், பட்டா நடைமுறைகளும் பேசுபொருளாகியுள்ளன..
சாதாரண பட்டாவிற்கும் நத்தம் பட்டாவிற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.. சாதாரண நிலங்கள் அரசின் வருவாய்ப் பதிவேடுகளில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, அதன் உரிமையாளர் யார் என்பது தெளிவாக இருக்கும்..
கிராம நத்தம் நிலம்
ஆனால், நத்தம் நிலங்கள் என்பவை ஆண்டாண்டு காலமாக மக்கள் குடியிருந்து வரும் இடங்கள்.. இந்த நிலங்கள் அரசு குடியிருப்புக்காக ஒதுக்கிய வகை நிலங்களாகும்; அவை தானாகவே முழுமையான தனிநபர் சொத்தாக மாறிவிடாது.. அதே சமயம், உரிமை தொடர்பான ஆவணங்கள் சில நேரங்களில் முழுமையாக இல்லாமல் இருக்கலாம்.. இதனால், நத்தம் நிலத்தை விற்கும்போதோ அல்லது தானமாக வழங்கும்போதோ சிக்கல்கள் எழுகின்றன..
பொதுமக்களிடையே இருக்கும் மிகப்பெரிய கேள்வி, "நத்தம் நிலத்தில் வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்குமா?" என்பதுதான்.. சரியான பட்டா மற்றும் தேவையான ஆவணங்கள் இருந்தால் சில வங்கிகள் கடன் வழங்குகின்றன.. ஆனால், சில கண்டிஷன்கள் உண்டு..
தூய பட்டா, தோராய பட்டா
நத்தம் நிலத்திற்கு உங்களிடம் தோராயப் பட்டா மட்டுமே இருந்தால் பல வங்கிகள் கடன் வழங்க தயங்கும்.. நத்தம் நில அளவைக்குப் பிறகு வழங்கப்படும் தூய பட்டா அல்லது நத்தம் நிலவரித் திட்ட பட்டா உங்கள் கையில் இருந்தால் மட்டுமே பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் பரிசீலனை செய்யும்..
குறிப்பாக, அந்த நிலத்தின் எல்லைகள் சரியாக அளக்கப்பட்டு, உட்பிரிவு அதாவது சப்-டிவிஷன் செய்யப்பட்டிருப்பது அவசியம்.. மேலும், வரி ரசீதுகள், EC, மற்றும் கட்டிட அங்கீகாரம் போன்ற ஆவணங்களும் தேவைப்படலாம்..
அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்புகள் நத்தம் நில உரிமையாளர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளன.. பழைய கிராம நத்தம் நிலங்களை வரன்முறைப்படுத்தவும், அவற்றுக்கு ஆன்லைன் மூலமாகப் பட்டா வழங்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது..
நத்தம் பட்டாக்கள்
முன்பெல்லாம் நத்தம் பட்டாக்கள் காகித வடிவில் மட்டுமே இருந்தன.. இப்போது அவை கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.. உங்கள் நிலம் நத்தம் என்று தெரிந்தால், உடனே இ-சேவை மையம் மூலம் அதன் தற்போதைய நிலையை சரிபார்ப்பது நல்லது.. ஒருவேளை ஆக்கிரமிப்பு நிலமாகவோ அல்லது "புறம்போக்கு" என்று வகைப்படுத்தப்பட்டிருந்தாலோ, எதிர்காலத்தில் அந்த இடத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ சிக்கல் ஏற்படலாம்..
நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான்.. நத்தம் நிலம் என்பது உழைக்கும் மக்களின் வாழ்வாதார சொத்து.. அதில் உள்ள சட்டச் சிக்கல்களை தவிர்க்க, முறையான நத்தம் நிலவரித் திட்ட பட்டாவைப் பெறுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.. முறையான ஆவணங்கள் கைவசம் இருந்தால், நத்தம் நிலமும் தங்கத்திற்கு இணையான மதிப்புடையதுதான் என்பதில் கொஞ்சம் கூட டவுட் வேண்டாம்..!!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications