கம்யூனிஸ்ட் தாத்தாவின் பேரன் என்பதை நந்தினியின் கரம்பிடித்து நிரூபித்த குணாஜோதிபாசு
சென்னை: தாம் ஒரு கம்யூனிஸ்ட் தாத்தாவின் பேரன் என்பதை மது ஒழிப்புப் போராளி நந்தினியின் கரம்பிடித்து நிரூபித்திருக்கிறார் குணாஜோதிபாசு.
மது ஒழிப்பு போராளியான வழக்கறிஞர் நந்தினி அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். ஒவ்வொருநாளும் போராட்டங்கள்தான்..

நந்தினி, அவரது தந்தை ஆனந்தன், தங்கை நிரஞ்சனா என ஒட்டுமொத்த குடும்பமே போராளிகள்.. நீதிமன்றத்தில் மது உணவுப் பொருளா? போதைப் பொருளா? என கேள்வி எழுப்பி அதிரவைத்தவர் நந்தினி.
நந்தினியின் திருமணம் ஜூலை 5-ந் தேதி நடைபெற இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தங்கைக்கும் சகோதரிக்கும் நீதி கேட்ட நிரஞ்சனாவும் சிறைக்குள் தள்ளப்பட்டார்.
நந்தினி ஜாமீனில் வெளியே வந்த உடன் மிக எளிமையான குணா ஜோதிபாசு என்ற இளைஞரை கரம்பிடித்திருக்கிறார். கரூரில் வசித்து வரும் சக்திவேல் மகன் குணா.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள எ. பண்ணைப்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட குடும்பம். குணா ஜோதிபாசுவின் தாத்தா கெண்டையசாமி தீவிரமான மார்க்சிஸ்ட் கட்சி தொண்டராக இருந்தவர்.
மிக சிறிய குக்கிரமான பண்ணைப்பட்டியில் திராவிட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். வெளிப்படையாக இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த குடும்பங்கள் இரண்டுதான். அதில் குணா ஜோதிபாசுவின் தாத்தாவும் ஒருவர்.
கெண்டையசாமி தமது மகன்களையும் அரசியல்மயமாக்கினார். இப்போது தாம் கம்யூனிஸ்ட் தாத்தாவின் மகன் என்பதை மது ஒழிப்புப் போராளி நந்தியின் கரம்பிடித்து நிரூபித்திருக்கிறார் குணா ஜோதிபாசு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications