அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி.. டிசம்பர் 2வது வாரத்திலேயே போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை.. செம
சென்னை: போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சு, அடுத்த மாதம், 2வது வாரத்தில் நடத்தப்படும் என்று போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். அத்துடன், அரசின் பண உதவியை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.. அவர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது.. இதையடுத்து, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, ஊதிய ஒப்பந்தத்துக்கான முதல் கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னையில் கடந்த ஜூலை 27ம் தேதி நடந்தது.

பேச்சுவார்த்தை: முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து 4 மாதங்களாகி விட்ட நிலையில், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடராஜன், ஆறுமுகநயினார் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை, தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறைச்செயலர் பணீந்திர ரெட்டியை நேற்றைய தினம் சந்தித்தனர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு முழுமையாக ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். டிரைவர்-கண்டக்டர் (D & C) என நியமிக்காமல், 2 பணிகளுக்கும் தனித்தனியே ஊழ ஊழியர்களை நியமிக்க வேண்டும். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதை கைவிட வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது,
கோரிக்கைகள்: அப்போது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை டிசம்பர் 2-வது வாரத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், ஓய்வு கால பணப்பலன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை செயலாளர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
மேலும் அரசின் பண உதவியை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், வரவு-செலவுக்கு இடையேயான வித்தியாசத் தொகை தொடர்பான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் சங்க நிர்வாகிகளிடம் போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
நம்பிக்கை: புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு, அடுத்த மாதம் 2வது வாரத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படுவதுடன், ஓய்வு கால பணப்பலன், அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணீந்திர ரெட்டி உறுதி அளித்துள்ளது, போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் பெற்று வருகிறது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications