Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி.. டிசம்பர் 2வது வாரத்திலேயே போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சு, அடுத்த மாதம், 2வது வாரத்தில் நடத்தப்படும் என்று போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். அத்துடன், அரசின் பண உதவியை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.. அவர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது.. இதையடுத்து, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, ஊதிய ஒப்பந்தத்துக்கான முதல் கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னையில் கடந்த ஜூலை 27ம் தேதி நடந்தது.

government employees tn transport department wages

பேச்சுவார்த்தை: முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து 4 மாதங்களாகி விட்ட நிலையில், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடராஜன், ஆறுமுகநயினார் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை, தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறைச்செயலர் பணீந்திர ரெட்டியை நேற்றைய தினம் சந்தித்தனர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு முழுமையாக ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். டிரைவர்-கண்டக்டர் (D & C) என நியமிக்காமல், 2 பணிகளுக்கும் தனித்தனியே ஊழ ஊழியர்களை நியமிக்க வேண்டும். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதை கைவிட வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது,

கோரிக்கைகள்: அப்போது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை டிசம்பர் 2-வது வாரத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், ஓய்வு கால பணப்பலன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை செயலாளர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மேலும் அரசின் பண உதவியை பெற்று அகவிலைப்படி உயர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், வரவு-செலவுக்கு இடையேயான வித்தியாசத் தொகை தொடர்பான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் சங்க நிர்வாகிகளிடம் போக்குவரத்துத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.

நம்பிக்கை: புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு, அடுத்த மாதம் 2வது வாரத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படுவதுடன், ஓய்வு கால பணப்பலன், அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணீந்திர ரெட்டி உறுதி அளித்துள்ளது, போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+