Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட் நியூஸ்.. முதன்முறையாக தமிழக பத்திரப்பதிவு துறை "சம்பவம்".. வெள்ளம் பாதித்தும்.. சூப்பர் சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் பத்திரப்பதிவு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், ஒரு மகிழ்ச்சி செய்தியை பதிவுத்துறை தற்போது வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் மற்ற துறைகளை போலவே பத்திரப்பதிவு துறையும் முழுக்க முழுக்க ஆன்லைன்மயமாகிவிட்டது.. அதேபோல, ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கு நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த வருடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ ரூ.25,000 கோடி வருவாய் ஆகும்..

Happy News from Tamil Naduu Government and new Revenue record in Registration Department registrar offices

அறிவிப்புகள்: இதை மையப்படுத்திதான், இந்த இலக்கை எட்டி பத்திரப்பதிவு பயணப்பட்டு வருகிறது. இதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும், வெளியிட்டு வருவதுடன், பொதுமக்களுக்கான சலுகைகளையும் வழங்கி வருகிறது..

இதில் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த நாட்களில் மட்டும், பத்திரப்பதிவு சற்று அதிகமாகவே நடக்கும் என்பதால், கூடுதல் வசூல் கிடைத்தும் வருகிறது..

இதைத்தவிர, மேலும் சில விடுமுறை நாட்களிலும் கூடுதல் பத்திரப்பதிவை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், அதற்கேற்றபடியும் விசேஷ டோக்கன்கள் கூடுதலாக விநியோகிக்கப்படுகின்றன.

சாதனை: இனி வரும் காலங்களிலும், இலக்கை எட்டிப்பிடிக்க பதிவுத்துறை மும்முரமாகி வருகிறது. அதுமட்டுமல்ல, பதிவுக்கு வரும் பொதுமக்களின் பணிகளை சிறப்பாக செய்து, புகாருக்கு இடமின்றி அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் பணிபுரிய வேண்டும் என்றும் அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை அடைய வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பதிவுத்துறை வருவாய் வளர்ச்சியில் மீண்டும் ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறருத.. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் பிப்ரவரி வரை, 1,171.60 கோடி ரூபாய் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதிநிர்மலா சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:

பதிவுத்துறை: 'நடப்பு நிதியாண்டில், கடந்த பிப்ரவரி மாதம் மட்டும், பதிவுத்துறை 1,812.69 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. கடந்த நிதியாண்டில், 2023 பிப்ரவரியில் 1,593.95 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. அதைவிட, இந்த ஆண்டு 218.74 கோடி ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் வரை, 16,653.32 கோடி ரூபாய், பதிவுத்துறையால் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.. இது, கடந்த ஆண்டு பிப்ரவரி வரை அடைந்த வருவாயான, 15,481.72 கோடி ரூபாயை விட, 7.57 சதவீதம், அதாவது 1,171.60 கோடி ரூபாய் கூடுதலாகும். 'ஜியோ கோஆர்டினேட்ஸ்' உடன் கூடிய புகைப்படத்தை, கிரைய ஆவணத்துடன் இணைத்து, ஆவணப்பதிவு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது..

பதிவுக்கட்டணம்: இதனால், கட்டிட மதிப்பிற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில் கட்டடங்களை மறைத்து, ஆவணம் பதிவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

இதனால், கட்டிடங்களின் மதிப்புக்கு உரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் அரசுக்கு செலுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது... முதலீடுகளின் வளர்ச்சி, தனி நபர் வருவாய் பெருக்கம் போன்றவை காரணமாக, பதிவுத்துறையில் இதை விட கூடுதல் வருவாய் இந்த நிதியாண்டில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பரில், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மனைகளின் விற்பனை பாதிக்கப்பட்டது.

வெள்ளநீர்: வெள்ள நீர் ஒரு சில நாட்களில் வடிந்தபோதிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மனைகளை வாங்க மக்கள் தயங்குவதால், மனைகளின் ஆவணப்பதிவு குறைந்துள்ளது. இதனால், கூடுதலாக எதிர்பார்க்கப்பட்ட வருவாய் வராமல் போனது.

இந்நிலையிலும், பதிவுத்துறை கடந்த ஆண்டில் பிப்வரி மாதம் வரை ஈட்டிய, 15,481.72 கோடி ரூபாயை விட கூடுதலாக, 1,171.60 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இதுவரை எய்தப்பட்ட அதிக வசூல் சாதனையாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+