காலையிலேயே மண்டையை பொளக்குது வெயில்.. அனல் காற்றும் வீசுமாம்.. சூதானமா இருங்க மக்களே!
இன்று 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: நேற்று போலவே இன்னைக்கும் அனல் காற்று வீச போகிறதாம்... கூடவே வெயிலும் சேர்ந்து கொளுத்த போகிறதாம்!
தமிழகத்தில் பனிக்காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பமாகி விட்டது. மார்ச் மாத துவக்கமே ஏப்ரல், மே மாத வெயிலை போல வாட்ட ஆரம்பித்து விட்டது. பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி கொண்டிருக்கிறது.
இதில் தமிழகத்தில் சில தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
Also Read | என்னாது.. ஒரே ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாயா?

வறண்ட வானிலை
ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று வீசுவது குறைந்துள்ளதால், வறண்ட மேற்குதிசைக் காற்று தமிழகம் நோக்கி வீசுகிறது என்றும் அதனால் பல நகரங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்து வருவதாகவும் சொல்லி இருந்தது.

100 டிகிரி
நேற்று கூட வேலூரில் 105 டிகிரி, திருத்தணியில் 104.9 டிகிரி, தருமபுரியில் 104.36 டிகிரி, கரூர் பரமத்தியில் 103.64 டிகிரி, மதுரை, திருச்சி, சேலம் 103 டிகிரி ஃபாரன்ஹீட் என வெப்பம் பதிவாகியுள்ளது.

8 வருடங்கள்
இதில் முக்கியமானது வேலூர்தான். அதிக குளிரும், அதிக வெயிலும் இந்த மாவட்டத்தில்தான் எப்போதுமே இருக்கும். அதன்படி 8 வருஷத்துக்கு பிறகு நேற்று 105 டிகிரி வெயில் அடித்திருக்கிறதாம்.

13 மாவட்டங்கள்
இன்றைய நிலவரம் என்னவென்றால், அனல் காற்று கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, ஈரோடு ,திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் வழக்கத்தை விட அதிகபட்சமாக 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்ற எச்சரிக்கையும் சேர்ந்தே விடுக்கப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications