ஆறு போல காட்சி அளிக்கும் சாலைகள்.. வேகமாக நிரம்பும் ஏரிகள்.. சென்னையில் தொடரும் கனமழை!
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் சாலையில் நீர் தேங்கி உள்ளது.தொடர் மழை காரணமாக சாலைகள் ஆறு போல காட்சி அளிக்கிறது.
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக மழை பெய்து வருகிறது. அதிலும் இன்று மாலையில் இருந்து தீவிரமாக கனமழை பெய்து வருகிறது.
மாலை 6 மணிக்கு துவங்கிய மழை இப்போதும் விடமால் பெய்து வருகிறது. பல இடங்களில் சென்னையில் இப்போதும் மழை விடாமல் பெய்து வருகிறது.
அடுத்த 12 மணி நேரம் கவனம்.. அதி தீவிர கனமழை பெய்யும்.. தூத்துக்குடிக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட்!
சென்னை மழை
சென்னையில் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் ஆறு போல தண்ணீர் தேங்கி உள்ளது. முட்டி வரை சில ஏரியாக்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. தாம்பரம், கிண்டி, பல்லாவரம், வடபழனி போன்ற பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி சில வீடுகளுக்குள் சென்றுள்ளது.
ஏரிகள்
சென்னையில் உள்ள புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரிகளில் தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. பாதுகாப்பு கருதி முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சென்னையை சுற்றி இருக்கும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
செம்பரம்பாக்கம்
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி. இந்த ஏரி தற்போது வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் பூண்டியில் இருந்து இங்கு செல்லும் நீர் அளவு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது 21 அடியை எட்டியுள்ளது. ஆனால் செம்பரம்பாக்கம் ஏரி இப்போது திறந்து விடப்படாது. இந்த ஏரி 22 அடியை தொட்டதும் தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி
அதேபோல் இன்று இரவும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நிரப்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் இதனால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.