விடிய விடிய பொளந்து கட்டிய மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள்.. சென்னை மக்கள் அவதி!
சென்னையில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை விடாது மழை பெய்து வருகிறது.
Recommended Video

சென்னை: சென்னையில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை விடாது மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சாலை முழுக்க தண்ணீர் தேங்கி உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் மழை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை அடுத்துள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை எப்படி
ஆனால் இந்த மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது சென்னைதான். சென்னையில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையை சுற்றி இருக்கும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

எங்கு எல்லாம்
நேற்று இரவில் இருந்து விடாமல் தற்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், கொளத்தூர், வேளச்சேரி, கே.கே.நகர், பெரும்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வடபழனி, கோயம்பேடு, தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

சாலைகள் எப்படி
இந்த மழை காரணமாக சாலைகள் முழுக்க தண்ணீர் தேங்கி இருக்கிறது. பல பகுதிகள் இதனால் வெள்ளக்காடாக மாறியது. கொளத்தூர், வேளச்சேரி, கே.கே.நகர், பெரும்பாக்கம் பகுதிகளில் சாலை முழுக்க தண்ணீர் தேங்கி வெள்ளம் போல ஓடியது.

மக்கள் அவதி
இந்த நிலை காரணமாக அங்கு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். பணிக்கு செல்ல முடியாமல் ஊழியர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சென்னையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications