அதிமுக தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தேர்வானதை எதிர்த்த மனு தள்ளுபடி...ஐகோர்ட்
சென்னை : அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
அதிமுக உட்கட்சித் தேர்தலை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட இயலாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் விதிகளை பின்பற்றாமல் தலைமை பொறுப்பிற்கு தேர்தல் நடைபெறுவதாக ஒசூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.
அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி பொன்னையன் அறிவித்தார். இந்நிலையில் ஒசூரை சேர்ந்த அதிமுக தொண்டர் ஜெயச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், அதிமுக தேர்தலில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தவிர போட்டியிட யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை, 1.50 கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவில் வாக்காளர் பட்டியல் வெளியிடவில்லை ஓபிஎஸ் ஈபிஎஸ் மட்டுமே தேர்வாக வேண்டும் என்பதற்காக கட்சி விதிகளில் திருததம் செய்யப்பட்டுள்ளது என தனது மனுவில் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டும் ஒரு பலனும் இல்லை எனவும் இருவரும் நியமனத்திற்கு ஒப்புதல் தராமல் இருக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜெயச்சந்திரன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது கிடையாது என தீர்ப்பளித்தனர். மேலும் அதிமுக உட்கட்சித் தேர்தல் விஷயத்தில் தலையிட்டு கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடமுடியாது எனக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். இதே கோரிக்கையை முன்வைத்து அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.சி. பழனிசாமி அதிமுக தேர்தலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications