லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் "அதிக முறை" சரித்திரம் படைத்தவர்கள் யார் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்!
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரே தொகுதியில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த அருணாசலம்.
லோக்சபா தேர்தல் தொடர்பான சில சுவராசிய தகவல்கள்:

தொடர்ந்து ஒரே தொகுதியில் 6 முறை வென்றவர் காங்கிரஸ் கட்சியின் அருணாசலம். தென்காசி (தனி) தொகுதியில் இருந்து 1977, 1980, 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து வென்றவர். காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார் அருணாசலம்
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் லோக்சபா தொகுதிகளில் இருந்து காங்கிரஸ் சார்பில் 6 முறை லோக்சபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி
திமுகவின் பழனி மாணிக்கம் தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் இருந்து 6 முறை வெற்றி பெற்றார்.
லோக்சபாவுக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: முரசொலி மாறன் (திமுக) டிஆர் பாலு (திமுக) ரங்கராஜன் குமாரமங்கலம் (காங்கிரஸ், பாஜக) தம்பிதுரை (அதிமுக) ஆர்.பிரபு (காங்கிரஸ்)
லோக்சபா தேர்தல் சரித்திரத்திலேயே தமிழகத்தில் போட்டியே இல்லாமல் ஒரே ஒரு முறை ஒரே ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். 1951 தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் டிஏ ராமலிங்க செட்டியார் போட்டியின்றி எம்பியானார்.
தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி ஶ்ரீபெரும்புதூர். மொத்தம் 23,58,526 பேர் வாக்காளர்கள்.
தமிழகத்தில் குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி நாகப்பட்டினம். இத்தொகுதியில் மொத்தம் 13,38,459 வாக்காளர்கள்.
இந்தியாவிலேயே அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி ஆந்திராவின் மல்காஜ்கிரி. 29,53,915 வாக்காளர்கள்
இந்தியாவிலேயே குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதி லட்சத்தீவு. மொத்தம் 47,972 பேர்தான் வாக்காளர்கள்.
நாட்டின் முதல் வாக்காளர் என்ற பெருமைக்குரியவர் இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டம் ஷியாம் சரண்.












Click it and Unblock the Notifications