"கண் சிவந்த" பாஜக மேலிடம்.. அங்கே ஓபிஎஸ் வைத்த வெடி.. இங்கே எடப்பாடி போட்டோவை வீசி அமர்க்களம்
எடப்பாடி பழனிசாமி போட்டோக்களை அகற்றி உள்ளனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் போட்டோக்களை, ஓபிஎஸ் ஆதரவாளர், அகற்றியும், மை ஊற்றி அழித்தும் ஆர்ப்பாட்டங்களை செய்து வருவது, தொடர்ந்து அதிமுகவை பதற்றத்தில் வைத்து வருகிறது.
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து மிகப்பெரிய அளவில் மோதல் வெடித்தது.. பொதுக்குழுவில் பெரிதும் அவமதிக்கப்பட்ட ஓபிஎஸ் மிகவும் இறுக்கமான முகத்துடன் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.
பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது..

அவமானங்கள்
பிறகு ஜுலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இப்படி அதிமுகவில் தினமும் நொடிக்கு நொடி பரபரப்புகள் எகிறி கொண்டிருக்கின்றன.. இதனால், கட்சி மறுபடியும் இரண்டாகுமோ என்ற கவலை தொண்டர்களை பீடித்து வருகிறது.. ஓபிஎஸ் விட்டுத்தர வேண்டும் என்று எடப்பாடியும், எடப்பாடி விட்டுத்தர வேண்டும் என்று ஓபிஎஸ்ஸும் போட்டி போட்டுக் கொண்டு இருப்பதாக தெரிகிறது.. ஒற்றைத் தலைமைதான் என்பதில் இபிஎஸ், இரட்டைத் தலைமைதான் என்பதில் ஓபிஎஸ்ஸும் இந்த நிமிடம் வரை தீவிரமாக இருக்கின்றனர்.

டெல்லி ஓபிஎஸ்
இந்நிலையில், நேற்று இரவே ஓபிஎஸ் டெல்லி கிளம்பி சென்றுள்ளார்.. ஏன், எதற்கு என்று தெரியவில்லை.. ஆனால், எடப்பாடியோ விடாமல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருக்கிறார்.. இதனிடையே, இரு தரப்பு ஆதரவாளர்கள், தங்கள் கோபத்தை, வன்மத்தை, அதிருப்தியை, வருத்தத்தை ஆங்காங்கே பதிவு செய்து வருகின்றனர்.. நேற்றைய தினம், ஓபிஎஸ் போட்டோக்களை, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அகற்றி எறிந்தனர்.. இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கமுதி
ஆனால், இன்றோ, எடப்பாடி பழனிசாமியின், போட்டோக்களை தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி, எடப்பாடி படத்தையும் கிழித்தெறிந்துவிட்டனர்.. அங்கு ஒரு சுவற்றில் எழுதப்பட்டிருந்த எடப்பாடி பெயரை கூட அழித்துவிட்டு, கோஷம் போட்டனர். அதேபோல, தேனி மாவட்டம் போடியில் உள்ள அதிமுக ஆபீசிலும் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ அகற்றப்பட்டுவிட்டது.. அந்தந்த அலுவலக வாயிலில் நின்று எடப்பாடிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

மை ஊற்றினர்
அலுவலகத்தின் வெளியே, எடப்பாடி போட்டோவை வைத்து, மை ஊற்றி அழித்தனர்... எடப்பாடி பழனிசாமியின் போட்டோக்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தூக்கி எறிந்த போட்டோவும், வீடியோவும் அதிமுகவுக்குள்ளேயே அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. டெல்லிக்கு சென்ற ஓபிஎஸ், என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.. அதிமுக கட்சி விவகாரம் குறித்து மோடியிடமும், அமித்ஷாவிடமும் ஓபிஎஸ் பேசியதாகவும், எடப்பாடி மீதான புகார்களை, அவர்களிடம் ஓபிஎஸ் வாசித்ததாகவும், கூறப்படுகிறது..

அமித்ஷா
எனினும், அதிமுகவின் இந்த உட்கட்சி பிரச்சனையை மேலிட தலைவர்கள் விரும்பவில்லையாம்.. கட்சி ஒன்றாக இருந்தால்தான், வாக்கு சதவீதம் அப்படியே கூட்டணிக்கு திருப்ப முடியும், திமுகவை பலவீனப்படுத்த முடியும் என்று பாஜக கணக்கு போடுகிறது.. அதுமட்டுல்ல, எடப்பாடி பழனிசாமி பக்கம், பெரும்பாலான ஆதரவாளர்கள் தற்போது இருப்பதால், இந்த முறையும் ஓபிஎஸ்ஸுக்கு டெல்லி ஆதரவு தருமா என்பது சந்தேகம்தானாம்.. என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

சசிகலா
இந்த நிலையில், இன்று மாலை டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஓபிஎஸ், சென்னை திரும்பினார்.. அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர்.. டெல்லியில் மேலிடத்தில் விவாதித்தது குறித்து நாளைய தினம், தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஒருவேளை டெல்லி பயணம் திருப்தியாக இல்லாவிட்டால், சசிகலா என்ற அஸ்திரத்தை ஓபிஎஸ் எப்போது வேண்டுமானாலும் எடுக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.. எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ்ஸின் டெல்லி விசிட், அதிமுக கூடாரத்தை லேசாக அசைத்தே தீரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்,
-
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications