Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமாவின் "பளீர்" மூவ்.. திரண்ட கட்சிகள்! எதிர்பார்க்காத ஆர்எஸ்எஸ்! பேரணிக்கு தடை கிடைத்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்பும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே நாளில் தமிழ்நாட்டில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு பேரணிகளுக்கு தடை விதித்து உள்ளது.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு அனுமதி வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் போலீசார் இந்த பேரணிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளனர்.

பேரணி

பேரணி

இங்கே ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கோர்ட் அனுமதி கொடுக்கும்படி உத்தரவிட்டதும் இன்னொரு பக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எம்பி திருமாவளவன் மத நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவதாக திருமா அறிவித்தார். அதே காந்தி ஜெயந்தி தினத்தில் பேரணி நடத்துவோம் என்று மத நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் குறித்த அறிவிப்பை திருமாவளவன் வெளியிட்டார். அதோடு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக வழக்கும் தொடுத்தார். உயர் நீதிமன்றம் தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்.

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது, அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. அக்டோபர் 2 ஆம் தேதி வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளது. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது, அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. அக்டோபர் 2 ஆம் தேதி வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளது. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விசிக

விசிக

இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசுக்கும் இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ் பேரணி. இன்னொரு பக்கம் விசிக பேரணி நடக்கிறது. இது போக இடையில் பெட்ரோல், டீசல் குண்டு தாக்குதல்கள் நடக்கின்றன. இதெல்லாம் போக பிஎஃப் அமைப்பை தடை செய்துள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் எந்த விதமான பேரணிக்கு இடம் கொடுத்தாலும் அது கலவரத்தில் முடியும் வாய்ப்புகள் உள்ளன.

திருமாவளவன்

திருமாவளவன்

இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ்ம் எதிர்பார்க்காத ஒரு சம்பவமும் நடைபெற்றது. விசிக போராட்டத்தை முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக இணைந்து நடத்துவதாக மட்டுமே இருந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நாம் தமிழர் கட்சி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. வேறு வேறு இடங்களில் இருக்கும் கட்சிகள் ஒன்றாக ஒரு குடையின் கீழ் கூடியதை ஆர்எஸ்எஸ் அமைப்பே எதிர்பார்க்கவில்லை.

 ட்விஸ்ட்

ட்விஸ்ட்

இதனால் விசிக நடத்தும் பேரணி பிரம்மாண்ட பேரணியாக உருவெடுத்தது. இந்த நிலையில்தான் சட்டென உள்ளே புகுந்த தமிழ்நாடு அரசு பேரணிக்கு தடை விதித்து உள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி காரணமாக சட்ட ஒழுங்கு கெடும் என்று கூறி, பாதுகாப்பு விஷயங்களை காரணம் காட்டி தடை விதித்து உள்ளது. அதேபோல்விசிக உள்ளிட்ட மற்ற அமைப்புகள், கட்சிகள் பேரணி நடத்தவும் தடை விதித்து உள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி செய்தால்.. நாங்களும் பேரணி செல்வோம் என்று திருமா உறுதியாக இருந்த நிலையில்தான்.. ஆளும் தரப்பு மொத்தமாக அனைத்து பேரணிகளுக்கும் தடை விதித்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+