திருமாவின் "பளீர்" மூவ்.. திரண்ட கட்சிகள்! எதிர்பார்க்காத ஆர்எஸ்எஸ்! பேரணிக்கு தடை கிடைத்தது எப்படி?
சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்பும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே நாளில் தமிழ்நாட்டில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு பேரணிகளுக்கு தடை விதித்து உள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு அனுமதி வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில்தான் போலீசார் இந்த பேரணிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளனர்.

பேரணி
இங்கே ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கோர்ட் அனுமதி கொடுக்கும்படி உத்தரவிட்டதும் இன்னொரு பக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எம்பி திருமாவளவன் மத நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவதாக திருமா அறிவித்தார். அதே காந்தி ஜெயந்தி தினத்தில் பேரணி நடத்துவோம் என்று மத நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் குறித்த அறிவிப்பை திருமாவளவன் வெளியிட்டார். அதோடு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக வழக்கும் தொடுத்தார். உயர் நீதிமன்றம் தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்.

ஆர்எஸ்எஸ்
விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது, அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. அக்டோபர் 2 ஆம் தேதி வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளது. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது, அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. அக்டோபர் 2 ஆம் தேதி வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளது. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விசிக
இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசுக்கும் இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ் பேரணி. இன்னொரு பக்கம் விசிக பேரணி நடக்கிறது. இது போக இடையில் பெட்ரோல், டீசல் குண்டு தாக்குதல்கள் நடக்கின்றன. இதெல்லாம் போக பிஎஃப் அமைப்பை தடை செய்துள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் எந்த விதமான பேரணிக்கு இடம் கொடுத்தாலும் அது கலவரத்தில் முடியும் வாய்ப்புகள் உள்ளன.

திருமாவளவன்
இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ்ம் எதிர்பார்க்காத ஒரு சம்பவமும் நடைபெற்றது. விசிக போராட்டத்தை முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக இணைந்து நடத்துவதாக மட்டுமே இருந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நாம் தமிழர் கட்சி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. வேறு வேறு இடங்களில் இருக்கும் கட்சிகள் ஒன்றாக ஒரு குடையின் கீழ் கூடியதை ஆர்எஸ்எஸ் அமைப்பே எதிர்பார்க்கவில்லை.

ட்விஸ்ட்
இதனால் விசிக நடத்தும் பேரணி பிரம்மாண்ட பேரணியாக உருவெடுத்தது. இந்த நிலையில்தான் சட்டென உள்ளே புகுந்த தமிழ்நாடு அரசு பேரணிக்கு தடை விதித்து உள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி காரணமாக சட்ட ஒழுங்கு கெடும் என்று கூறி, பாதுகாப்பு விஷயங்களை காரணம் காட்டி தடை விதித்து உள்ளது. அதேபோல்விசிக உள்ளிட்ட மற்ற அமைப்புகள், கட்சிகள் பேரணி நடத்தவும் தடை விதித்து உள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி செய்தால்.. நாங்களும் பேரணி செல்வோம் என்று திருமா உறுதியாக இருந்த நிலையில்தான்.. ஆளும் தரப்பு மொத்தமாக அனைத்து பேரணிகளுக்கும் தடை விதித்து உள்ளது.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications