அரிசி கொம்பன் நன்றாக இருக்கிறான்.. ஆனால் உடல் மெலிந்தது ஏன் தெரியுமா?.. வனத்துறை அதிகாரி பேட்டி
சென்னை: அரிசி கொம்பன் யானை நலமுடன் இருக்கிறான் என்றும் இயற்கையான உணவுகளை சாப்பிடுகிறான் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் மேகமலைப்பகுதி மக்களை பீதியிலும் அச்சத்திலும் ஆழ்ந்தி வந்தது கேரளாவை சேர்ந்த அரிசிக் கொம்பன் யானை. இது மூணாறு பகுதியை சேர்ந்தது.

இந்த யானை கம்பம் பகுதிகளில் சுற்றித் திரிந்த போது தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றிய பால்ராஜ் என்பவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த பால்ராஜ் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர். ஆனாலும் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. இந்த நிலையில் அந்த யானையை கடந்த 6 ஆம் தேதி அன்று 3 மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். வழியோர பகுதிகளில் அரிசிக் கொம்பனின் ஆக்ரோஷத்தை தணிக்க மேலும் இரு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தின் மணிமுத்தாறு பகுதி மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி 45 கி.மீ. தொலைவு மலை மீதுள்ள மாஞ்சோலைக்குள் கொண்டு வந்தனர். மயக்க ஊசியின் தாக்கத்தால் 4 நாட்கள் உணவு உட்கொள்ளாமலும் 2 நாட்கள் தண்ணீர் குடிக்காமலும் இருந்தது. இந்த நிலையில் இந்த அரிசிக் கொம்பன் மிகவும் பலவீனமடைந்துவிட்டது.
இதையடுத்து அரிசிக் கொம்பனை 25 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கோதையாறு பகுதியில் கொண்டு போய்விட்டனர். மேலும் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க கொம்பனின் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் அரிசிக் கொம்பன் யானை பார்ப்பதற்கு உடல்நலக் குறைவுற்று காணப்படுகிறது. கோதையாறு பகுதியில் குட்டியாறு இடத்தில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து யானை விடப்பட்ட இடத்தைவிட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி வருகிறது.
உடல் மெலிந்து காணப்படுவதால் மருத்துவ சிகிச்சை வழங்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. அது போல் அதன் சாணத்தை எடுத்து பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகப்பிரியா தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அரிசிக் கொம்பன் நலமுடன் உள்ளது.
அரிசியை சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது இயற்கையான உணவுகளை சாப்பிடுகிறது. தூரத்திலிருந்து புகைப்படம் எடுக்கப்பட்டதால் மெலிந்தது போல் தெரிகிறது. மற்றபடி யானை நன்றாக இருக்கிறது என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications