Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலுமணி ரெய்டில் கற்ற பாடம்.. கே.சி.வீரமணிக்கு எதிராக நடந்த ரகசிய ஆபரேஷன்.. தொண்டர்களுக்கு டிமிக்கி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான, 28 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். ஆனால், சோதனை நடத்தும் தகவல் லீக் செய்யப்படாமல் மிகவும் ரகசியம் காக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video

    கே.சி. வீரமணி மீதான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வோம் - வழக்கறிஞர் செல்வம்

    கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியபோது முன்கூட்டி அந்த விஷயம் அவரது காதுகளுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

    இதையடுத்து காலை 6 மணி முதலே தொண்டர்கள் வேலுமணி வீட்டுக்கு முன்பாக புகுந்து போராட்டங்கள் நடத்தியதாகவும் கூறப்பட்டது .

    பெரும் தள்ளுமுள்ளு

    பெரும் தள்ளுமுள்ளு

    போலீசாருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் பேரிகேட்களை தள்ளி கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுபோன்ற பரபரப்பு சம்பவங்கள் வேலுமணியின் வீட்டுக்கு எதிரே நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஆனால், வீரமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் சோதனைகள் நடைபெற்றாலும் அது குறித்த தகவல் முன்கூட்டியே வெளியே தெரியவிடவில்லை.

    கருப்பு ஆடுகள்

    கருப்பு ஆடுகள்

    கடந்த முறை விஷயம் எப்படி வெளியே கசிந்தது என்பதை காவல்துறை உயர் அதிகாரிகள் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஆபரேஷனை மிகவும் ரகசியமாக செயல்படுத்தி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகள், கோவை மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகள் மூலம் ரெய்டு நடக்கப்போகும் தகவல் முன்கூட்டியே எதிர் முகாமுக்கு சென்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த முறை கருப்பு ஆடுகள் காதுகளுக்கு தகவல் செல்லாமல் உஷாராக ரகசியம் காத்து இந்த ரெய்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தான் காலை முதல் அதிமுக தொண்டர்கள் அங்கு வந்து குவியவில்லை. இதனால் காவல்துறையினரின் பணிகளுக்கு இடையூறு ஏற்படவில்லை.

    சாலை மறியல்

    சாலை மறியல்

    ரொம்பவே தாமதமாக காலை 10.30 மணி அளவில் இடையப்பட்டி பகுதியில் அதிமுகவினர் சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். வேலுமணி வீட்டுக்கு முன்பாக போராட்டம் நடத்திய தொண்டர்களுக்கு காலையில், இட்லி, பொங்கல், டீ, காபி போன்றவை வழங்கப்பட்டன. மதியம், தக்காளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் போன்றவை வழங்கப்பட்டன. அத்தோடு விடவில்லை வெயிலுக்கு இதமாக மாலையில் ரோஸ் மில்க் வழங்கப்பட்டது.

    வடை போச்சே

    வடை போச்சே

    வீரமணி வீட்டில் சோதனை நடத்துவது தொண்டர்களுக்கு தெரியாது என்பதால் அவர்கள் வந்து குவியவில்லை. இதனால் அவர்களுக்கு டிபன் , சாப்பாடு போன்றவையும் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார்கள் நமட்டு சிரிப்புடன் களத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+