குரு பூஜைக்கு வந்தால்.. எடப்பாடி மீது தாக்குதல் நடக்கும்.. பரபரப்பை கிளப்பிய சசிகலா டீம்.. அலறுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டால் குருபூஜையில் பெரிய பிரச்சனையே வரும். இதை மீறி குருபூஜைக்கு போலீஸ் பாதுகாப்பு அவருக்கு கொடுக்கப்படலாம், அவர் மீது அதை மீறி செருப்பை தூக்கி ஒருவர் வீசினால் எடப்பாடி என்ன செய்ய முடியும், என்று தேனி கர்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த மாதம் 30ம் தேதி பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். தேவர் குருபூஜையை கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் பசும்பொன்னிற்கு செல்ல உள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Huge warning against Edappadi Palanisamy for his plan to visit Muthuramalinga Devar Guru Poojai

எடப்பாடி பழனிசாமி; இது தொடர்பாக சசிகலா ஆதவாளர் தேனி கர்ணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி துரோகம் மேல் துரோகம் செய்துவிட்டார். சசிகலாவை ஏமாற்றினார். அதன்பின் டிடிவி தினகரனை ஏமாற்றினார். ஆட்சிக்கு 4 ஆண்டுகள் உறுதுணையாக இருந்த ஓ பன்னீர்செல்வமை ஏமாற்றினார். அப்படி இருக்க அவரை எப்படி தென் மண்டல மக்கள் நம்புவார்கள். அவரை எப்படி தென் மண்டல மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவர் இதை மீறி எப்படி பசும்பொன்னுக்கு வர முடியும். எப்படி தேவர் பூஜையில் கலந்து கொள்ள முடியும்.

பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டால் குருபூஜையில் பெரிய பிரச்சனையே வரும். இதை மீறி குருபூஜைக்கு போலீஸ் பாதுகாப்பு அவருக்கு கொடுக்கப்படலாம். போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படலாம் . ஆனால் அவர் மீது அதை மீறி செருப்பை தூக்கி ஒருவர் வீசினால் எடப்பாடி என்ன செய்ய முடியும். தூரத்தில் இருந்து எடப்பாடியை நோக்கி செருப்பு பறந்து வந்து தாக்கினால் என்ன செய்வார். எடப்பாடியால் என்ன செய்ய முடியும்.

குரு பூஜை: அவரை முக்குலத்தோர் மதிக்கவில்லை. அவர் மதுரைக்கே மாநாடு நடத்தும் போது செல்லவில்லையே. அப்படி இருக்கும் போது அவரால் எப்படி குருபூஜைக்கு வர முடியும் . தென் மாவட்ட மக்கள் அவரை எப்படி அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். அவருக்கு அச்சம் இருக்கிறது. அதனால்தான் அவரால் மதுரைக்கு கூட வர முடியவில்லை. இதுதான் வெற்றிகரமான மாநாடா? இதுதான் மதுரையில் அதிமுக நடத்திய பெரிய மாநாடா?

Huge warning against Edappadi Palanisamy for his plan to visit Muthuramalinga Devar Guru Poojai

எப்படி அவரை முக்குலத்தோர் மதிப்பார்கள். அவர் மீது தாக்குதல் நடக்கும். நான் தூண்டவில்லை. பசும்பொன் வந்தால் அவர் மீது தாக்குதல் நடக்கும். தேவர் சமூகத்தை சேர்ந்தவர்களை எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திவிட்டார். அவர்களை ஏமாற்றிவிட்டார். அருவாளை எடுத்து வெட்ட மாட்டார்கள். ஆனால் எவனாவது ஒருவன் வந்து செருப்பை எடுத்து அடிப்பான். எவனாவது ஒருவன் செருப்பை தூக்கி வீசுவான்.

எடப்பாடி வந்தால் அது சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும். அங்கே பிரச்சனை. அங்கே மக்கள் மனநிலை அப்படி உள்ளது. இவரை மக்கள் எட்டப்பனாக பார்க்கிறார்கள். அவரை எட்டப்பன் என்றே நினைக்கிறார்கள். காந்தியை கொன்ற கோட்ஸே போல பார்க்கிறார்கள். அப்படி இருக்க அவர் எப்படி குருபூஜைக்கு வர முடியும். மக்கள் அவரை நம்ப மாட்டார்கள். முக்குலத்தோர் அல்ல தென் மாவட்டத்தில் யாருமே அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்று தேனி கர்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+