Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புடிங்க புடிங்க.. மெரினாவில் ப்ளூ காரில் அலப்பறை.. உள்ளே இருந்த 2 பெண்கள் யார்? போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹூண்டாய் எலண்ட்ரா நீல ரக கார் அலப்பறை செய்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த காரை போலீசார் துரத்தி சென்று மடக்கிய நிலையில், விருட்டென்று தப்பித்து செல்லும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த காரில் இருந்த 2 பெண்கள் யார் என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் இன்று அதிகாலை மெரினா கடற்கரை சாலையில் கார் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கமாக அதிகாலை நேரத்தில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவாகவே இருக்கும்.

Chennai Marina beach Crime

இந்த நிலையில் இன்று அதிகாலை மெரினா கடற்கரை சாலையில் ஹுண்டாய் எலன்ட்ரா ரக நீல நிறத்தினாலான கார் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக சென்றிருக்கிறது. குறிப்பாக மெரினா காமராஜர் சாலை - விவேகானந்தர் இல்லம் அருகே எதிர்புறத்தில் இருந்து கடற்கரை சாலைக்குள் சென்ற போது, திடீரென பின்னோக்கியும் முன்னோக்கி சென்றும் காரில் சாகசம் செய்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், அந்த காரை மடக்கி பிடித்துள்ளார். அப்போது பின்னோக்கி சென்ற கார், அந்த காவலரை இடிக்கும் வகையிலும் முன்னோக்கி வந்துள்ளது. எச்சரிக்கையாக இருந்த காவலர் உடனடியாக ஒதுங்க, அந்த கார் மின்னல் வேகத்தில் முன்னோக்கி சென்று வலது புறமாக திரும்பி இருக்கிறது. அந்த காரில் ஒரு இளைஞரும், 2 இளம் பெண்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

Chennai Marina beach Crime

மீண்டும் அந்த காரை கடற்கரை சாலையில் போலீசார் மடக்கி பிடிக்க முயற்சித்த போதும், போக்கு காட்டி தப்பி இருக்கிறது. தற்போது அந்த காரின் பதிவெண் கொண்டு, யாருடைய கார், காரினை இயக்கியது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது. அந்த காரின் பதிவெண் TN 07 CS 1315 என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கார் மயிலாப்பூர் பகுதியில் உள்ள அபிஷேக் என்பவரின் பெயரில் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் சென்னையின் மிக முக்கியமான சாலையில் காரில் சாகசம் செய்திருப்பது மக்கள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.

Chennai Marina beach Crime
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+