ரொம்ப வருத்தமாக இருக்கு! தமிழில் பேச முடியலையே! மேடையிலேயே உருகிய ராஜ்நாத் சிங்.. என்னாச்சு?
சென்னை: இந்தியாவில் மிகவும் பழமையான மொழி என்பதோடு, இந்திய மொழிகளின் தாய் மொழியாக இருக்கும் தமிழில் பேச முடியவில்லையே என மேடையிலேயே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மிகவும் வருத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. அதன்படி நாடு முழுவதும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த பொதுக்கூட்டங்கள் தமிழ்நாட்டிலும் நடந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தந்தார். தென்சென்னை லோக்சபா தொகுதி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு வேலூரில் நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அந்த வரிசையில் தான் இன்று சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தனக்கு தமிழ் மொழி பேச தெரியாமல் போனதை நினைத்து மனம் வருந்தினார். இதுபற்றி ராஜ்நாத் சிங் கூறியதாவது:
வணக்கம்.. சகோதர, சகோதரிகளே நண்பர்களே உங்கள் முன்பு சென்னையில் இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது மிகவும் உற்சாகமான, சிறந்த பண்பாடு மிகுந்த நகராகும். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக நான் இருக்கிறேன். ஆனால் போர்படையை இதற்கு முன்பு மிகவும் திறமையாக கையாண்டவர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆவார்கள். அவர்கள் பிறந்த பூமியில் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
தமிழ்நாடு திருவள்ளூவர் போன்ற மிகப்பெரிய கவிஞர்களையும், அறிஞர்களை தந்த நிலம். திருக்குறள் என்ற நூலை திருவள்ளூவர் தந்துள்ளார். திருக்குறளின் கருத்துகள் பாடல் வரிகளாக மட்டுமின்றி மிக முக்கிய முடிவுகளை எடுக்க வழிகாட்டும் நூலாக உள்ளது. சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் வாழ்ந்த பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி.
தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழ் மொழி அழகான மொழி மட்டுமல்ல. எல்லா மொழிகளுக்கான தாயான மொழியாக தமிழ் உள்ளது. இந்தியாவின் பழமையான மொழியாகவும், தொன்மை கொண்ட மொழியாவும் உள்ளது. இத்தகைய தொன்மை கொண்ட தமிழ் மொழியில் பேச விரும்புகிறேன். ஆனால் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன். தமிழ் மொழி எனக்கு தெரியாது என்பதால் எனது தாய்மொழியான இந்தியில் பேச உள்ளேன்'' எனக்கூறி தனது உரையை தொடங்கினார்.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications