போஸ்டர் விவகாரம்.. உயிர் மூச்சு உள்ளவரை ஓபிஎஸ்- ஈபிஎஸ்க்கு உண்மையாக இருப்பேன்.. பதறிய அமைச்சர்!
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் என ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவுக்கு இரட்டை தலைமை இருப்பதால் யாரிடம் அதிகாரம் உள்ளது என்று தெரியவில்லை. இரண்டு தலைமை இருப்பதால் முடிவு எடுப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது என அதிமுகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் செங்கோட்டையன்
ஆலோசனை கூட்டத்தை முன்னிட்டு 'பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருக' என்று அதிமுக தலைமையகம் அருகில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே அமைச்சர் செங்கோட்டையன் பொதுச்செயலாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

செய்தியாளர்கள் கேள்வி
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நேர்மையாக இருப்பேன்
அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், யாரோ போஸ்டர் ஒட்டியதற்கு நான் பொறுப்பாக முடியாது என்றார். மேலும் இறுதி மூச்சு இருக்கும் வரை முதல்வர், துணை முதல்வர் தலைமையில் செயல்பட்டு வரும் தலைமைக்கு நேர்மையாக இருப்பேன்.

போஸ்டர் ஒட்டியது தவறு
பொதுச்செயலாளர் பதவி வழங்கக் கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது தவறு எனவும், தற்போதுள்ள அதிமுக தலைமையை ஏற்று செயல்படுவேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

புதிய திட்டங்கள்
மேலும் தனியார் பள்ளிகள் அஞ்சும் வகையில், தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது எனவும் கூறினார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications