சிங்கப்பூர், துபாயை போன்று சென்னையை மாற்றுவோம்… பாமக வேட்பாளர் சாம்பால் பிரச்சாரம்
சென்னை : சிங்கப்பூர் துபாயை விட சென்னையை மிகப்பெரிய அளவில் மாற்றுவோம் என பாமக வேட்பாளர் சாம்பால் பிரச்சாரம் செய்தார்.
மத்திய சென்னையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜான்பால், சவுகார் பேட்டை பகுதியில் வசிக்கும் வட மாநில மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இரவு, பகலாக பணியாற்றி சிங்கப்பூர், துபாய் போல சென்னையை பெரிய அளவில் மாற்றிக்காட்டுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
மத்திய சென்னையில் உள்ள, அனைத்து பிரச்சினைகளையும் மூன்று மாதத்தில் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வெளி நாட்டில் இருந்து சென்னைக்கு தொழில் தொடங்க வருபவர்களை சில கிருமிகள் தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
சென்னையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதன் மூலம் இரண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரப்படும் என்றும் கூறினார்.
தற்போது, மாங்காய் சீசன் தொடங்கி விட்டதாகவும், இலை, தாமரை மாம்பழத்துடன் சேர்ந்து விட்டதாகவும் அவர் கூறினார் .












Click it and Unblock the Notifications