ஊழல்வாதிகளை எதிர்த்தால் ரவுடியா.. பரவாயில்லை ரவுடியாகவே இருக்கோம்.. திமுகவுக்கு பதிலடி கொடுத்த பாஜக
சென்னை: ‛‛ஊழல்வாதிகளை எதிர்க்கும் அண்ணாமலையை ரவுடி என கூறினால் அப்படியே அழையுங்கள்'' என திமுகவின் எம்பி செந்தில்குமாருக்கு பாஜகவின் மாநில துணை தலைவர் நாராயண் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்கட்சி பூசலால் அதிமுக பிளவுப்பட்டு உள்ளது. இதனால் சமீபகாலமாக தமிழகத்தின் அரசியல் என்பது பாஜக, திமுகவை சுற்றியே நிகழ்ந்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக தலைவர்கள் இடையே வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. பொது மேடைகள், டுவிட்டர் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் அவர்கள் கருத்துகள் பதிவிட்டு ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

பிடிஆர்-அண்ணாமலை மோதல்
இந்த கருத்து மோதல்கள் நேற்று முதல் இன்னும் தீவிரமாகி உள்ளது. நேற்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜக அண்ணாமலை தொடர்பான படங்களை வெளியிட்டு ஆடு இமோஜியை பயன்படுத்தி விமர்சனம் செய்தார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் காட்டமாக பதிலளித்தார். அப்போது, ‛‛பிடிஆர் பழனிவேல் அரசியலுக்கும், மாநிலத்திற்கும் சாபக்கேடு. என் செருப்புக்கூட அவர் நிகரில்லை'' என தெரிவித்து இருந்தார். இது கடும் சர்ச்சையானது.

திருப்பி அடிப்போம் என பேட்டி
மேலும் இன்று சென்னையில் அளித்த பேட்டியில், ‛‛திமுக தான் மதஅரசியல் செய்கிறது. திமுக மிரட்டும் தொனியில் அரசியல் செய்தால் அதை கண்டு பயப்படமாட்டோம். நான் இயேசு கிறிஸ்து அல்ல. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டும் அவசியம் இல்லை. திருப்பி அடிப்போம்'' என ஆக்ரோஷமாக கூறியிருந்தார்.

தர்மபுரி திமுக எம்பி எதிர்ப்பு
இந்நிலையில் தான் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛தமிழக பாஜகவில் மரியாதைக்குரிய தலைவர்களாக டாக்டர் தமிழிசை, டாக்டர் முருகன், ராதா கிருஷ்ணன் போன்றோர் இருந்தார்கள். தற்போதைய மாநில தலைவர் என்பவர் பண்பற்ற, கலாச்சாரமற்ற, தூய்மையற்ற, இழிவான, அரசியல் கண்ணியமற்ற நபராக உள்ளார். ரவுடிகள் பயன்படுத்தும் மொழியை பத்திரிகையாளர் சந்திப்பு உள்பட பிற இடங்களில் பயன்படுத்துகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது'' என விமர்சனம் செய்துள்ளார்.

நாராயண் திருப்பதி பதிலடி
இதனை தற்போது பாஜகவின் துணை தலைவர் நாராயண் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ஊழல்வாதிகளை எதிர்க்கிறார் என்பதற்காக ஒருவரை ரவுடி என்று அழைத்தால் தாராளமாக அப்படியே அழைக்கலாம். தமிழ்நாட்டில் மரியாதைக்குரிய வகையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பற்ற, பயனற்ற, தகுதியற்ற நபராக உள்ளார். அவர்களின் சொந்த மொழியில் மக்களிடம் பதில் சொல்வதில் தவறில்லை'' என காட்டமாக பதில் அளித்துள்ளார்.
-
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு!












Click it and Unblock the Notifications