ஊழல்வாதிகளை எதிர்த்தால் ரவுடியா.. பரவாயில்லை ரவுடியாகவே இருக்கோம்.. திமுகவுக்கு பதிலடி கொடுத்த பாஜக
சென்னை: ‛‛ஊழல்வாதிகளை எதிர்க்கும் அண்ணாமலையை ரவுடி என கூறினால் அப்படியே அழையுங்கள்'' என திமுகவின் எம்பி செந்தில்குமாருக்கு பாஜகவின் மாநில துணை தலைவர் நாராயண் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்கட்சி பூசலால் அதிமுக பிளவுப்பட்டு உள்ளது. இதனால் சமீபகாலமாக தமிழகத்தின் அரசியல் என்பது பாஜக, திமுகவை சுற்றியே நிகழ்ந்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக தலைவர்கள் இடையே வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. பொது மேடைகள், டுவிட்டர் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் அவர்கள் கருத்துகள் பதிவிட்டு ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

பிடிஆர்-அண்ணாமலை மோதல்
இந்த கருத்து மோதல்கள் நேற்று முதல் இன்னும் தீவிரமாகி உள்ளது. நேற்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜக அண்ணாமலை தொடர்பான படங்களை வெளியிட்டு ஆடு இமோஜியை பயன்படுத்தி விமர்சனம் செய்தார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் காட்டமாக பதிலளித்தார். அப்போது, ‛‛பிடிஆர் பழனிவேல் அரசியலுக்கும், மாநிலத்திற்கும் சாபக்கேடு. என் செருப்புக்கூட அவர் நிகரில்லை'' என தெரிவித்து இருந்தார். இது கடும் சர்ச்சையானது.

திருப்பி அடிப்போம் என பேட்டி
மேலும் இன்று சென்னையில் அளித்த பேட்டியில், ‛‛திமுக தான் மதஅரசியல் செய்கிறது. திமுக மிரட்டும் தொனியில் அரசியல் செய்தால் அதை கண்டு பயப்படமாட்டோம். நான் இயேசு கிறிஸ்து அல்ல. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டும் அவசியம் இல்லை. திருப்பி அடிப்போம்'' என ஆக்ரோஷமாக கூறியிருந்தார்.

தர்மபுரி திமுக எம்பி எதிர்ப்பு
இந்நிலையில் தான் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛தமிழக பாஜகவில் மரியாதைக்குரிய தலைவர்களாக டாக்டர் தமிழிசை, டாக்டர் முருகன், ராதா கிருஷ்ணன் போன்றோர் இருந்தார்கள். தற்போதைய மாநில தலைவர் என்பவர் பண்பற்ற, கலாச்சாரமற்ற, தூய்மையற்ற, இழிவான, அரசியல் கண்ணியமற்ற நபராக உள்ளார். ரவுடிகள் பயன்படுத்தும் மொழியை பத்திரிகையாளர் சந்திப்பு உள்பட பிற இடங்களில் பயன்படுத்துகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது'' என விமர்சனம் செய்துள்ளார்.

நாராயண் திருப்பதி பதிலடி
இதனை தற்போது பாஜகவின் துணை தலைவர் நாராயண் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ஊழல்வாதிகளை எதிர்க்கிறார் என்பதற்காக ஒருவரை ரவுடி என்று அழைத்தால் தாராளமாக அப்படியே அழைக்கலாம். தமிழ்நாட்டில் மரியாதைக்குரிய வகையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பற்ற, பயனற்ற, தகுதியற்ற நபராக உள்ளார். அவர்களின் சொந்த மொழியில் மக்களிடம் பதில் சொல்வதில் தவறில்லை'' என காட்டமாக பதில் அளித்துள்ளார்.
-
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications