2024-ல் மோடி மீண்டும் பிரதமரானால் அதிபர் ஆட்சி.. 'யாரை' வேண்டுமானாலும் தூக்கிலிடுவாங்க..ஆ.ராசா பகீர்
சென்னை: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடி மீண்டும் பிரதமரானால் நாடாளுமன்ற தேர்தல் இனி இல்லை.. அதிபர் ஆட்சிதான்.. பாகிஸ்தான் போல யாரை வேண்டுமானாலும் தூக்கிலிடுவார்கள் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. திடுக்கிட வைக்கும் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ஆ.ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: அரசியல் சாசனத்தில் ஒருமைப்பாட்டை காப்பாற்றுவோம் என்பது உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் கபளீகரம் செய்யும் வேலையை, ஒழிய வேண்டும் என்கிற வேலையை இன்றைக்கு மோடியும் அமித்ஷாவும் மத்தியிலே அரசாங்கத்திலேயே செய்து கொண்டிருக்கின்றனர். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இந்துக்களில் தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் படிக்கக் கூடாது. இப்படி வர்ணாசிர தர்மத்தைக் கொண்டு வருகிற ஆட்சி 9 ஆண்டுகளாக நடைபெறுகிறது.

அதிபர் ஆட்சி, தூக்கில் போடுவாங்க: இந்த ஆட்சி இன்னொரு முறை வந்தால், அரசியல் சட்டம் இருக்காது. அதான் அவர்களது கோரிக்கை. ஜனநாயகம் இருக்காது. 2024 தேர்தலில் தப்பித் தவறி மோடி வந்துவிட்டால் அதற்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் இந்த நாட்டி இல்லை.. இல்லவே இல்லை. இதற்குப் பிறகு அதிபர் ஆட்சிதான் பாகிஸ்தான் மாதிரி.. யாரை வேண்டுமானாலும் தூக்கில் போடலாம். ஒரே மொழிதான் இருக்கும். இந்திதான் பேசனும். சமஸ்கிருதம்தான் பேசனும்.
பிளாஸ்டிக் சர்ஜரி, புஷ்ப வாகனம் புரூடா: இந்தியாவின் ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சந்திரயானை அனுப்பிவிட்டு சொல்கிறார், சமஸ்கிருதத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது. விண்வெளிக் கலனை உருவாக்க சமஸ்கிருதத்தில் ஏற்கனவே புஷ்ப வாகனம் இருந்தது. புஷ்ப வாகனம் என ஒன்னு இருந்துச்சாம். அதைத்தான் இப்ப கண்டுபிடிச்சிருக்காங்களாம். பிளாஸ்டிக் சர்ஜரி இருந்துச்சாம்.. அதனால்தான் விநாயகர் வந்தாராம். எப்ப, 5000 வருஷத்துக்கு முன்னால பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததாம். இதெல்லாம் இவனுக விடுகிற புரூடா.
டெல்லி வல்லாதிக்க எதிர்ப்பு போர்: ஆனால் நான் சொன்னேன்.. எங்கள் தமிழ் மொழி அறிவியல் மொழி; நியாயத்தை சொன்ன மொழி; பொய் சொல்லாதே - திருடாதே- நல்லவனா இருன்னு சொன்ன ஒரே மொழி தமிழ் மொழி என்றேன். இன்று நடைபெறுவது திராவிடத்துக்கும் ஆரியத்துக்குமான போர். இன்று நடைபெறுவது சமத்துவத்துக்கும் எதேச்சதிகாரத்துக்குமான போர். இன்றைக்கு நடக்கின்றன போர் நம்முடைய கலாசாரம், மொழியை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என கொக்கரிக்கக் கூடிய டெல்லி வல்லாதிக்கத்தை எதிர்க்கின்ற போர்.
தத்துவார்த்த யுத்தம்: இந்தப் போரில் முன்னிலை வகிக்க கூடிய ஒரே தகுதி வாய்ந்த தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இந்த அளவுக்கு மோடியை, அமித்ஷாவை நேருக்கு நேராக எதிர்க்கின்ற துணிச்சல் உள்ள ஒரு தலைவன் இங்கே இல்லை. எங்ககிட்ட பாஜககாரன் கேட்கிறான், நாங்கதான் உங்க கிட்ட வம்புக்கே வரலையே என. வம்பு என்பது பாஜகவுடன் மோடியுடன் அமித்ஷாவுடன் அல்ல. மோடியும் அமித்ஷாவும் கொண்டு வருகிற தத்துவம்தான் எங்களுக்கான பிரச்சனை. தமிழ்நாட்டுக்கு எதிரான தத்துவம்; திராவிடத்துக்கு எதிரான தத்துவம்; பெரியார், அண்ணா, கருணாநிதிக்கு எதிரான தத்துவம்; ஆகையால் ஸ்டாலின் எதிர்க்கிறார் என்றேன். இவ்வாறு ஆ.ராசா பேசினார்.
-
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?











Click it and Unblock the Notifications