தமிழ்நாட்டின் அருமை தெரியனும் என்றால்.. ஒரு முறையாவது வட இந்தியா பக்கம் போங்க -தமிமுன் அன்சாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் அருமை தெரிய வேண்டும் என்றால் ஒரு முறையாவது வட இந்தியா பக்கம் போய்வர வேண்டும் என மஜக பொதுச்செயலாளர் தமுமுன் அன்சாரி பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒற்றுமையை வட இந்தியாவில் பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று தமிமுன் அன்சாரி பேசியதாவது;

தமிழ்நாடு வாழ்க என முழங்குவதற்கு பல காரணங்கள் உண்டு தமிழ்நாட்டின் சிறப்புகளை உணர வேண்டும் என்றால் ஒரு நாளாவது உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார் , போன்ற வட மாநிலங்களில் சென்று பார்க்க வேண்டும். அல்லது வட இந்தியாவில் இருந்து வரும் ரயில்களில் பயணம் செய்ய வேண்டும்.

If you want to know the beauty of Tamil Nadu.. Go to North India at least once - Thamimun Ansari

இதன் மூலம் மட்டுமல்ல கலாச்சாரம் ஒற்றுமை மூலம் தமிழ்நாட்டின் சிறப்பை உணரலாம். இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், ஒற்றுமை சிறப்பாக உள்ளது மாமன் மச்சான்களாக நாம் வாழ்கிறோம் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து வருகிறோம்.

அதனால்தான் தமிழ்நாட்டின் புதல்வர்கள் என்பதில் பூரிப்படைகிறோம். இங்கு சோழர் காலத்தில் சோழ மன்னர்களும், முஸ்லிம்களும், நெருக்கமாக வாழ்ந்துள்ளனர், சுலைமான் நபி அவர்களுக்கு பூம்புகார் துறைமுகம் வழியே ஏற்றுமதி செய்த முத்துக்கள் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாண்டிய மன்னன் சீனாவுக்கான தூதுக்குழுவுக்கு ஒரு முஸ்லிமை தான் தலைவராக அனுப்பி வைத்தார். சேர மன்னன், சேரமான் பெருமாள் தான், இஸ்லாத்தை தழுவிய முதல் மன்னர் ஆவார்.

இங்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ஒற்றுமையோடு வழி நடத்திய நாடு தமிழ்நாடு.இந்த ஒற்றுமையை வட இந்தியாவில் பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+