Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் ஆணைய முடிவால் காலியான லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி.. துரை குமாருக்கு கூடுதல் பொறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி காலியாக உள்ள நிலையில், அப்பொறுப்பை ஐ.ஜி. துரை குமார் கவனிப்பார் என உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்ட பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. பதவிக்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த நியமனத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றதை அடுத்து, தற்போது காலியாக உள்ள பதவிக்கு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசு நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பதவி காலியாக இருந்த சூழலில், தற்போது அந்தப் பொறுப்பை கவனிப்பதற்கான பொறுப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

IG Durai Kumar Given Additional Charge of DVAC DGP Post Amid Vacancy

முன்னதாக, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி-யாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் இந்த நியமனத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, சந்தீப் மிட்டலின் நியமனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பணியிடம் காலியாக இருந்தது.

இந்நிலையில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-யாக (SIC-I) பணியாற்றி வரும் ஏ.டி. துரை குமார் ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை அல்லது ஒரு நிரந்தர அதிகாரி நியமிக்கப்படும் வரை, ஐ.ஜி. துரை குமார் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பை முழுமையாகக் கவனிப்பார். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பிற்கு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நிர்வாகப் பணிகள் தொய்வின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.டி. துரை குமார் 2004 ஆம் ஆண்டு பேட்ச், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி. இவர் தமிழக காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில், குறிப்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யில் பணியாற்றியுள்ளார். 2022-ல் திருநெல்வேலி காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து, தமிழக அமலாக்கத்துறை ஐஜியாக (IG Enforcement) மாற்றப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+