Cyclone Nivar: மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயலின் பெயர் நிவர்.. பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல
சென்னை: மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயலுக்கு நிவர் என இந்திய வானிலை மையம் பெயரிட்டுள்ளது.
Recommended Video
சென்னை மாமல்லபுரம் அருகே நேற்று குறைந்த தாழ்வு நிலை உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறியுள்ளது. இது புயலாக மாறும் என்றும் அது பயணிக்கும் பாதை குறித்து கணிக்கப்பட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் வடதமிழகம், ஆந்திரம் எங்கு கரையை கடக்கும் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகர்வதை வானிலை மைய அதிகாரிகள் கண்டறிந்தனர்.

கனமழை
இதனால் புயலானது நிச்சயம் உருவாகி நவம்பர் 25-ஆம் தேதி சென்னை மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும். இந்த புயலால் கடலோர மாவட்டங்களுக்கு அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதீத மழை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத மழை பெய்யும். நாளை முதலே தமிழகத்தில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிலையில் இந்த புயலுக்கு நிவர் என இந்திய வானிலை மையம் பெயரிடப்பட்டுள்ளது.

அடுத்த பெயர் என்ன
இது போல் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்திய பெருங்கடல் அருகே உருவாகும் புயல்களுக்கு ஏற்கெனவே ஆம்பன், நிசர்கா, கடி என பெயரிடப்பட்டுள்ளன. அந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது நிவர்.

நிவருக்கு அர்த்தம் என்ன
நிவர் என்றால் தடுப்பு, முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு என அர்த்தம் வருகிறது. பெயருக்கேற்ப இந்த நிவர் சைலண்ட்டாக வந்த வழியே தெரியாமல் போய்விடுமா இல்லை வைலண்ட்டாக நடந்து கொள்ளுமா என்பது காற்றின் வேகத்தை பொருத்தே தெரியவரும்.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications