‛சென்னையில் நாளை மின்தடை’.. எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா? உங்கள் பகுதி இருக்கானு லிஸ்ட்டை பாருங்க
சென்னை: சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) சில முக்கிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் மாதம் ஒருமுறை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் என்பது நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாதத்தில் குறிப்பிட்ட ஒருநாள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பராமரிப்பு பணிகளை ஊழியர்கள் மேற்கொள்வார்கள்.

இந்நிலையில் தான் சென்னை பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) சில முக்கிய பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில முக்கிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி மற்றும் ஏபி ஸ்விட்சை மாற்றும் பணி வரும் வெள்ளிக்கிழமை (அதாவது நாளை) நடைபெற உள்ளது. இதனால் பட்டாபிராம், தந்துறை, சேக்காடு மற்றும் அதனை சுற்றிய இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
அதன்படி பட்டாபிராம், தந்துறை, ஐயப்பன்நகர், சேக்காடு, கோபாலபுரம் கிழக்கு மற்றும் மேற்க, தென்றல் நகர், முல்லை நகர், தெற்கு பஜார், வள்ளலார் நகர், வெங்கடாபுரம், அண்ணா நகர், சி டி எச் சாலை, சார்லஸ் நகர், டிரைவர்ஸ் காலனி, மாடர்ன் சிட்டி, காமராஜபுரம், சாஸ்திரி நகர், ஐஏஎஃப் சாலை மற்றும் அதனருகே உள்ள இடங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் வரை மின்தடை ஏற்பட உள்ளது.
இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே தங்களின் பணிகளை முடித்து மின்வாரியத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மின்வாரியம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications