பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி
சென்னை: தலைநகர் சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியானது, கடந்த 75 ஆண்டுகளில் தற்போது பதினாறாவது முறையாக முற்றிலும் வறண்டு போய் காட்சியளிக்கிறது.
சென்னை மக்களின் தாகம் தணிப்பதில் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் பருவமழை பொய்த்ததாலும், கடந்த சில மாதங்களாக வாட்டி வதைத்த கொடூர வெயிலினாலும் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி காரணமாக, தமிழகமே தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது.

7 கோடி மக்கள் தொகையில் சுமார் 1 கோடி பேர் வசிக்கும் தலைநகர் சென்னையின் நிலை தான், இருப்பதிலேயே மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்நிலையில் சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் நீர்தேக்கங்களில் ஒன்றான பூண்டி ஏரி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.
34.98 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட 16 பெரிய மதகுகளை கொண்ட பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடியாகும். கடல் மட்டத்தில் இருந்து 138 அடியும், ஏரியின் நீர்மட்ட உயரம் 35 அடியாகவும் அமைக்கப்பட்டது.1944ம் ஜூன் 14ம் தேதி அப்போதைய சென்னை மேயரான ஆர்தர் ஹோப் பூண்டி நீர்தேக்கத்தை திறந்து வைத்தார்.
கிட்டத்தட்ட பூண்டி ஏரி செயல்பாட்டிற்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பருவமழை பொய்த்ததாலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து இல்லாததாலும், பூண்டி ஏரி முற்றிலும் வறண்டுள்ளது.
இது பற்றி தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், கடந்த 75 ஆண்டுகளில், பூண்டி ஏரியானது 16 ஆண்டுகள் முழு அளவு வறட்சியை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதில் 1948 முதல் 1952 வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் பூண்டி ஏரி முற்றிலும் வறட்சியை சந்தித்துள்ளது.
அதன் பின்னர் 1969, 1974, 1983, 1987 ஆண்டுகளிலும் அதன் பிறகு 1991 முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளும், பின்னர் 2000, 2013 என 15 ஆண்டுகள் பூண்டி ஏரி பூஜ்ய நிலை அளவிற்கு வறண்டுள்ளது. தற்போது வறட்சியினால் நடப்பாண்டு 16வது ஆண்டாக முற்றிலும் வறண்டுள்ளது.
முற்றிலும் வறண்டு காணப்படும் பூண்டி ஏரியில் சில இடங்களில் குட்டைபோல நீர் தேங்கியுள்ளது. இதில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுலா தலமான பூண்டி நீர்த்த தேக்கம் வறண்டதோடு மட்டுமல்லாமல் செத்த மீன்களால் நாறி கிடப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications