ரஜினிக்கு எதிரான வருமான வரி வழக்கு ஏன் வாபஸ் பெறப்பட்டது தெரியுமா.. சீமான் கொடுத்த கலக்கல் விளக்கம்
நடிகர் ரஜினிக்கு எதிர்காலத்தில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக மத்திய அரசு அவருக்கு எதிரான வருமான வரி வழக்கை வாபஸ் வாங்கிவிட்டது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிக்கு எதிர்காலத்தில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக மத்திய அரசு அவருக்கு எதிரான வருமான வரி வழக்கை வாபஸ் வாங்கிவிட்டது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், 2002 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் வருமான வரியை முறையாகச் செலுத்தவில்லை என கூறி, 66,22,436 ரூபாய் அபராதம் விதித்து வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்காக 2014-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

நேற்று நடந்த இந்த, வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான அபராதத் தொகைக்கு புதிதாக வழக்கு தொடருவது வழக்கம் இல்லை. ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுகிறோம். ரஜினிக்கு 1 கோடி ரூபாய்க்கு குறைவாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ரஜினிக்கு எதிரான இந்த வழக்கையும் திரும்ப பெறுகிறோம் என்று கூறினார்.
இதையடுத்து ரஜினிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வருமான வரி வழக்கு, விசாரணை இன்றி முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு குறித்து, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ரஜினிக்கு சுயமாக எதுவும் பேச தெரியாது. சினிமாவில் யாரவது எழுதிக் கொடுத்ததை அவர் பேசுவார். தற்போது நிஜத்திலும் அவர் மற்றவர்கள் எழுதிக்கொடுத்ததை பேசுகிறார்.
குருமூர்த்தி எழுதிக் கொடுத்ததைதான் ரஜினி பேசுகிறார். அவருக்கு எதுவும் சுயமாக சொல்லவோ, சிந்திக்கவோ தெரியாது. ரஜினியை வருங்கால தமிழக தலைவராக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
அதற்கு வருமான வரி வழக்கு இடையில் இருந்தது. அவருக்கு தொந்தரவு வரக்கூடாது என்பதால் வருமான வரி வழக்கை பாஜக திரும்ப பெற்றுவிட்டது. அவருக்கு எதிராக வேறு ஏதாவது வழக்குகள் இருந்தாலும் அதுவும் வாபஸ் பெறப்படும்.
ரஜினி பேசும் கருத்துக்கள் எல்லாமே பாஜகவின் கருத்துக்கள்தான். தமிழகத்தில் பாஜகவை கொண்டுவர ரஜினி பாடுபடுகிறார். ரஜினி சொன்னது போல துக்ளக் படிப்பவன் புத்திசாலி அல்ல, திருக்குறள் படிப்பவன்தான் புத்திசாலி, என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications