Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரி ரிட்டர்ன்.. refund + வட்டி எல்லாம் போச்சு.. பல ஊழியர்களுக்கு சிக்கல்.. என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி ரீஃபண்டுக்காக இன்னும் பல லட்சம் ஊழியர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 லட்சத்திற்கும் மேல் refund கேட்டவர்களுக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை. அவர்களின் refund மிக தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

உங்களுக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கு வருமான வரி கணக்கு refund வழங்கப்படவில்லை. செப்டம்பர் 16 அன்று வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்து கிட்டத்தட்ட 4 மாதங்களாகியும், பல வரி செலுத்துவோர் இன்னும் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறவில்லை. சிலருக்கு ஏற்கனவே ரீஃபண்டு கிடைத்திருந்தாலும், பலர் இன்னும் காத்திருக்கிறார்கள்.

income tax ITR

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வரி ரீஃபண்டு தாமதங்களை ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆண்டு உயர் மதிப்பு பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதே தாமதத்திற்கான முக்கிய காரணம் என்று CBDT கூறியுள்ளது. நிலுவையில் உள்ள பெரும்பாலான ரீஃபண்டுகள் இந்த மாதத்தின் பிற்பகுதியிலோ அல்லது டிசம்பர் மாதத்திலோ முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாமதமான ரீஃபண்டுகளுக்கு வட்டி

தாமதமான ரீஃபண்டுகளுக்கு வழக்கமாக வட்டி கிடைக்கும் என்றாலும், சில சமயங்களில் வரி செலுத்துவோருக்கு வட்டி கிடைக்காமல் போகலாம். மும்பையைச் சேர்ந்த வரி மற்றும் முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின் இது குறித்து விளக்கினார். "ஆம், வரி செலுத்துவோருக்கு ரீஃபண்டு தாமதமானால் வட்டி கிடைக்கும். ஆனால், தாமதத்திற்கான பொறுப்பு வரி செலுத்துவோரையே சார்ந்திருந்தால், அந்த காலத்திற்கான வட்டி கிடைக்காது" என்று அவர் கூறினார்.

"வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31. அந்த தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்டு, அதிகப்படியான TDS அல்லது முன்பண வரி செலுத்தப்பட்டிருந்தால், ரீஃபண்டுக்கான வட்டி ஏப்ரல் 1 முதல் ஆண்டுக்கு 6% வீதம் கணக்கிடப்படும். ஆனால், ஜூலை 31க்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டால், ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து வட்டி கணக்கிடப்படும்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தாமதமான வருமான வரி ரீஃபண்டுகளுக்கு வரி செலுத்துவோருக்கு எப்போதும் வட்டி கிடைப்பதில்லை. உங்களுக்கு வட்டி கிடைக்குமா என்பது வருமான வரிச் சட்டம் பிரிவு 244A-ன் கீழ் உள்ள சில விதிகளைப் பொறுத்தது.

தாமதமான ரீஃபண்டுகளுக்கு வட்டி கிடைக்காத சூழ்நிலைகள்:

ரீஃபண்டு தொகை மிகக் குறைவாக இருந்தால்: பல சமயங்களில், ரீஃபண்டு மொத்த செலுத்த வேண்டிய வரியில் 10% க்கும் குறைவாக இருந்தால், வட்டி பொருந்தாது.

வரி செலுத்துவோரால் ஏற்பட்ட தாமதம்: நீங்கள் தாமதமாக தாக்கல் செய்வது, வங்கி விவரங்களை தாமதமாக சரிசெய்வது, வரி அறிவிப்புகளுக்கு தாமதமாக பதிலளிப்பது போன்ற உங்கள் தவறுகளால் தாமதம் ஏற்பட்டால் வட்டி கிடைக்காது.

மேல்முறையீடுகள் அல்லது சிறப்பு மதிப்பீடுகளிலிருந்து எழும் ரீஃபண்டுகள்: இங்கு வட்டி கணக்கீடு வேறுபடலாம், மேலும் முழு காலத்திற்கும் வட்டி கிடைக்காமல் போகலாம்.

வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 244A, ரீஃபண்டு செலுத்தப்பட வேண்டிய சூழ்நிலைகளில் வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை எளிய வட்டியை வழங்க வேண்டும் என்று கூறுகிறது.

முக்கிய விதிகள்: ஒரு ரீஃபண்டு நிலுவையில் இருந்தால், வரி செலுத்துவோர் மாதத்திற்கு 0.5% (அல்லது மாதத்தின் ஒரு பகுதிக்கு) எளிய வட்டிக்கு தகுதியுடையவர்.

முன்பண வரி, TDS அல்லது TCS-க்கு, சரியான நேரத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டால், மதிப்பீட்டு ஆண்டின் ஏப்ரல் 1 முதல் வட்டி தொடங்கும். காலக்கெடுவுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டால், வட்டி தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கும். மேல்முறையீட்டு உத்தரவுகளிலிருந்து எழும் ரீஃபண்டுகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஆண்டுக்கு கூடுதல் 3% வட்டி கிடைக்கும்.

வரி செலுத்துவோர் அல்லது deductor காரணமாக ரீஃபண்டு தாமதமானால், அவர்களுக்குரிய காலம் வட்டி கணக்கீட்டிலிருந்து விலக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+