Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரி விலக்கு.. வெள்ள நிவாரண தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறதா? தமிழக அரசு அடுத்த முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பலன்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் மூலம் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. என்ன காரணம்?

கடந்த 2021ம் ஆண்டு, தமிழக அரசு சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன்படி, கூட்டுறவு சங்கங்களில் வட்டி வருவாய் 40 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமானால், வருமான வரிச்சட்டத்தின் 194A, 194N ஆகிய பிரிவுகளின்கீழ் வருமானவரி பிடித்தம் செய்ய வேண்டுமென மாநில அரசு தலைமை கூட்டுறவு வங்கி மூலம், பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Income Tax Exemption and MHC suggests to TN Government distributing flood relief fund to bank accounts of beneficiaries

ஆனால், இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை சிரகிரி முருகன் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட 5 சங்கங்கள் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன.

விசாரணை: இந்த வழக்குகள், நேற்றைய தினம் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது சங்கங்கள் தரப்பில் வாதிடும்போது, "அரசின் பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பலன்களை உறுப்பினர்களுக்கு வழங்கும் பணியை சங்கங்கள் மேற்கொள்கின்றன. அதனால் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக எடுக்கப்படும் தொகைக்கு வருமான வரி செலுத்த முடியாது, வருமானவரி விலக்கு வழங்கப்பட்டது" என்று வாதிடப்பட்டது.

உடனே இதற்கு வருமானவரித்துறை தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது.. "மனுதாரர் சங்கங்களுக்கு எந்த விலக்கும் வழங்கப்படவில்லை, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்குதான் வரிவிலக்கு பொருந்தும்.. வங்கிகளிலிருந்து எடுக்கும் பணத்தின் உச்சவரம்பை, அப்போதைய முதல்வர் மற்றும் தலைமை செயலாளரின் கோரிக்கையை ஏற்று, ஒரு கோடி ரூபாயிலிருந்து 3 கோடியாக அதிகரித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது.

விசாரணை: இந்த 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தன்னுடைய உத்தரவில் சொன்னதாவது: "முதலீடுகளை பெற்று வட்டி வழங்கக்கூடிய மனுதாரர் சங்கங்கள் ரிசர்வ் வங்கி விதிகளின்படி, வங்கி நடவடிக்கைதான் என்பதால் வரி பிடித்தம் செய்யலாம். தற்போதைய நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து, அதில் அதிகமாக பிடித்தம் செய்திருந்தால் திரும்ப வழங்க கோரலாம்.

அரசின் கடன் தள்ளுபடி அல்லது வட்டி தள்ளுபடி போன்ற சலுகைகள் போலி நபர்களுக்கு சென்றடைகின்றன.. வருமான வரி சட்டத்தின் பிரிவு 194N என்பது பண விநியோகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கும், பணமில்லாத பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்குமான வழிகளில் ஒன்றாகவும் உள்ளது.

வங்கி கணக்கு: வங்கி கணக்கை தொடங்குது மிகவும் எளிதான செயலாக உள்ளதால், பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம், கொரோனா நிவாரணம் போன்ற நிவாரணங்களை வங்கி கணக்கிலேயே செலுத்தலாம். இதனால், பயனாளிகள் தாங்கள் சார்ந்துள்ள சங்கங்களை அணுக வேண்டிய அவசியமில்லை.. நேரமும் மிச்சமாகும்.. சங்கத்தின் பணிச்சுமையும் குறையும்.

Income Tax Exemption and MHC suggests to TN Government distributing flood relief fund to bank accounts of beneficiaries

எத்தனையோ விதமான மோசடிகள் நடக்கின்றன.. இவைகளை தடுக்க தமிழக அரசு திட்டமிட்டாலும், ஏமாற்றுபவர்கள் புது புது வழிகளை கண்டுபிடித்தபடியே இருக்கிறார்கள்.. அதனால்தான், அரசு வழங்கும் உதவி, நேரடியாக பயனாளருக்கு சென்றடையவேண்டும்.. இல்லாவிட்டால், ஏழை விவசாயிகள், நெசவாளர்களின் பணம் மோசடி செய்யப்பட்டுவிடும்..

முறைகேடுகள்: எனவே, பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பலன்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் மூலம் வழங்கப்பட்டால், முறைகேடுகள் வெகுவாக தடுக்கப்படும்" என்று கூறிய நீதிபதி இந்த வழக்குகளை முடித்துவைத்தார்.

பணப்பலன்களை நேரடியாகவே வங்கி கணக்கில் செலுத்தும்படி, தமிழக அரசுக்கு ஹைகோர்ட் யோசனை தெரிவித்துள்ளது, மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+