இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்தது - குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 91,930 ஆக உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்றாம் அலையில் மூன்று லட்சம் பேருக்கு மேல் பதிவானது. படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது கொரோனா பாதிப்பு. நேற்று முன்தினம் 50,407 பேர், நேற்று 44,877 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல் ஒரேநாளில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 91,930 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,16,77,641 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தமிழகத்தில் வெறும் 2,296 பேருக்கு மட்டுமே கொரோனா..ஆக்டிவ் கேஸ்களும் 42,000க்கு கீழ் குறைந்தது
அத்துடன் கடந்த 24மணிநேரத்தில் 346 பேர் கொரோனாவால் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் 5,09,011பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை4,78,882 ஆக குறைந்துள்ளது. . தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 3.19% ஆக உள்ள நிலையில் இதுவரை 172.95கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இன்று முதல் கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு அளித்துள்ளது. அதில், 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் நீக்கப்பட்டுள்ளது. அதனால், 14 நாட்கள் தாங்களாகவே உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டும் எனவும், 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரொனா நெகட்டிவ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.