இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்தது - குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 91,930 ஆக உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்றாம் அலையில் மூன்று லட்சம் பேருக்கு மேல் பதிவானது. படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது கொரோனா பாதிப்பு. நேற்று முன்தினம் 50,407 பேர், நேற்று 44,877 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல் ஒரேநாளில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 91,930 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,16,77,641 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் கடந்த 24மணிநேரத்தில் 346 பேர் கொரோனாவால் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் 5,09,011பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை4,78,882 ஆக குறைந்துள்ளது. . தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 3.19% ஆக உள்ள நிலையில் இதுவரை 172.95கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு இன்று முதல் கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு அளித்துள்ளது. அதில், 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் நீக்கப்பட்டுள்ளது. அதனால், 14 நாட்கள் தாங்களாகவே உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டும் எனவும், 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரொனா நெகட்டிவ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications