சீன பல்கலைக்கழகத்தில்.. மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாணவர்.. விசாரணை தீவிரம்
சென்னை: சீனாவின் தியான்ஜின் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் கயா பகுதியைச் சேர்ந்தவர் அமன் நாக்சென். இவர் சீனாவின் தியான்ஜின் வெளிநாட்டு ஆய்வு பல்கலைக்கழகத்தில் வணிக பிரிவில் படித்து வந்தார்.

இந்நிலையில், 20 வயதான அமன் நாக்செனின் உடல், கடந்த ஜூலை 29ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அறையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை. இது குறித்து விசாரணை செய்து வருவதாகச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்ப பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்காக தியான்ஜினில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடனும் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இது தொடர்பாகப் பீகார் பாஜக தலைவர் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த சீனாவுக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்வதாகவும் ட்வீட் செய்துள்ளனர்.
கடந்த 2019 இறுதியில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சீனாவில் படித்து வந்த பெரும்பாலான இந்திய மாணவர்கள் நாடு திரும்பிவிட்டனர். தற்போது வெகு சில இந்திய மாணவர்கள் மட்டுமே சீனாவில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!












Click it and Unblock the Notifications