"குறி" வைக்கப்படுகிறாரா முக்கிய "தலை".. சிக்கிய டிரான்ஸ்போர்ட் நடராஜன்.. அன்புமணி நறுக் கேள்வி
அன்புமணி ராமதாஸ் திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: லஞ்ச பணத்தை கையும் களவுமாக பிடித்தும்கூட, ஒரு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல், டிரான்ஸ்பர் செய்துள்ளது சரியா, என்று திமுக அரசுக்கு பாமகவின் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக போக்குவரத்து துறையின், சென்னை கமிஷனர் ஆபீசில் துணை கமிஷனராக பணியாற்றியவர் நடராஜன்...
ஆர்டிஓ அலுவலக பணியாளர்களின் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கு லஞ்சம் பெறுவதாக இவர் மீது புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

திடீர் சோதனை
இதையடுத்து, கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சென்னை எழிலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில், நடராஜனின் உதவியாளர் முருகன் தங்கியிருந்த ரூமிலும் சோதனை நடத்தப்பட்டது.. அப்போது, லஞ்சமாக பெற்ற 37 லட்சம் ரூபாய் ரொக்கம், பண பரிவர்த்தனைக்கான சான்றுகளும் கிடைத்தன.. நடராஜனின் உதவியாளர் முருகன், 2 நாளைக்கு முன்தினம் நாகர்கோவில் ஆர்டிஓ அலுவலகத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், துணை கமிஷனர் நடராஜனும் நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளார்..

திடீர் டிரான்ஸ்பர்
இதற்கான உத்தரவை, தமிழக கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். இந்த திடீர் டிரான்ஸ்பர் பல தரப்பிலும் சந்தேகத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. காரணம், போக்குவரத்து துறை ஆணையர் சிக்கிய இந்த விவகாரத்தில், துறை வாரியாக உள்ள அமைச்சருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது..

மேலிடம்
இது தொடர்பான புகார்களும் மேலிடத்துக்கு சென்றதாக கூறப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் தான், நடராஜன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:

சிக்கிய அதிகாரி
சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு சோதனையில் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு காரணமான துணை ஆணையர் -1 நடராஜன் எந்த தண்டனையும் இல்லாமல் நெல்லைக்கு இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பணத்துடன் சிக்கிய அதிகாரி குறித்து விசாரித்த போது, அவர் பதவி உயர்வு வழங்க 7 பேரிடமிருந்து தலா ரூ. 5 லட்சம் வசூலித்தது உறுதியாகியுள்ளது.

டிரான்ஸ்பரா?
பதவி உயர்வுக்காக மேலும் 35 பேரிடமிருந்து ரூ.1.75 கோடி வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அவர் மீது காவல்துறை வழக்கும் பதிவு செய்திருக்கிறது! சம்பந்தப்பட்ட அதிகாரி 2019-ஆம் ஆண்டில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஆக இருந்த போது அவரது அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனையிட்டு, ரூ.88 லட்சம் பணத்தை கைப்பற்றியதுடன், வழக்கும் பதிந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அவரது துறையினரே பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர்!

டிரான்ஸ்பர் ஏன்
கையூட்டு பணத்துடன் சிக்குபவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், எந்த சோதனையும், எந்த கைது நடவடிக்கையும் இல்லாமல் இட மாற்றத்துடன் அந்த ஊழல் அதிகாரி தப்பவிடப்பட்டிருக்கிறார். இது பெரும் அநீதி! ரூ.100 கையூட்டு வாங்கியதற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், ரூ. 2.10 கோடி கையூட்டு வாங்கிய அதிகாரி தப்பவிடப்படுகிறார் என்றால், அது ஊழலை ஒழிக்க உதவாது. ஊழல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதுடன், கைது செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
-
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை!












Click it and Unblock the Notifications