கே.என்.நேரு மீதான ஊழல் வழக்கு! அதிமுக மனுவை திருப்பியனுப்பியதாக வெளியான செய்திக்கு இன்பதுரை மறுப்பு
சென்னை: அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனு பிழையுடன் உள்ளதால் உயர்நீதிமன்ற பதிவுத்துறை திரும்ப அளித்ததாக செய்திகள் வெளியான நிலையில் இதை மாநிலங்களவை எம்பியும் வழக்கறிஞருமான இன்பதுரை மறுத்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேரு சுமார் ரூ 1,020 கோடி வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டி, வழக்குப்பதிவு செய்யக் கோரி அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்குக் அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யுமாறு அதிமுக எம்.பி. இன்பதுரை, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை அடிப்படையாக வைத்து உடனடியாக அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஊழல் எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக அமலாக்கத் துறை தெளிவாக கூறியுள்ளதாகவும் இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென டிசம்பர் மாதம் 13-ம் தேதி புகாளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்து நியாயமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நடைமுறை பிழைகளுடன் தாக்கல் செய்துள்ளதால் அதனை பிழைகளை திருத்தம் செய்ய கோரி மனுவை உயர்நீதிமன்ற பதிவுத்துறை திரும்ப அளித்துள்ளது. மேலும் மனுவில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்தால் வழக்கு எண்ணிடப்படும் அதிமுக தரப்பு வழக்கறிஞர்களிடம் பதிவுத்துறை பதிவுதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை திமுகவினர் பரப்பி வருகிறார்கள். மேலும் இன்பதுரையை விமர்சித்து வரும் நிலையில் அவரோ, "அட அல்பங்களே" என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது ட்வீட்டில் அமைச்சர் நேரு மீது நான் தொடர்ந்த வழக்கு எண்ணிடப்பட்டுள்ளது. WP Crl . No: 74 of 2026.
நாளை அல்லது மறுநாள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது! என தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications